காகபுசுண்டர் காவியம் 26 - 30 of 33 பாடல்கள்

காகபுசுண்டர் காவியம் 26 - 30 of 33 பாடல்கள்

     
26. லீலைபொற் காணுமுகம் போலே காணும்
    நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்;
ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே
    அரகரா சக்கரங்க ளாறுங் காணும்
வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்
    மகத்தான அண்டமது கோவை காணுஞ்   
சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும்
    சிவத்திலே அரகரா பரமுங் காணே.

விளக்கவுரை :
    
27. பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே
    பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்;
நிரத்திலே சடமதனில் யகாரங் காணும்
    நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்
வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்
    வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்
    நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே.

விளக்கவுரை :

    
28. பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால்
    பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது
    சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை;
கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக்
    காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும்
இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது
    எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி.

விளக்கவுரை :
    
29. இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம்
    இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளு மிவளே மூலம்
    சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
    ஐவருக்குங் குருமூல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
    கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே.

விளக்கவுரை :

    
30. கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி
    கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த
    மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே!
உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம்
    ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்   
கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி
     கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் காவியம், kakapusundar, kakapusundar kaviyam, siththarkal