பட்டினச் சித்தர் ஞானம் 61 - 65 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 61 - 65 of 101 பாடல்கள்


61. வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான்.

விளக்கவுரை :

62. தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே
வானம் பிளந்து வழிகூடின் - நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு.

விளக்கவுரை :

63. தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து
பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அருஞ்சரத் தம்மத னடி.

விளக்கவுரை :

64. மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறலால் வேறில்லை - மதனாலே
தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்த சுகத்தை வெறுத்து.   

விளக்கவுரை :

65. வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கிற் போகாதே - குறித்தெடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal