காகபுசுண்டர் காவியம் 16 - 20 of 33 பாடல்கள்

காகபுசுண்டர் காவியம் 16 - 20 of 33 பாடல்கள்

     
16. செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச்
    சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்;
கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்
    குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே?
அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே?
    அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே?
ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே?
    ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே!

விளக்கவுரை :
    
17. உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு;
    உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்;
    பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்;
இரையென்றால் வாய்திறந்து பட்சி போல
    எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்;
நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்
    நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே?

விளக்கவுரை :
    
18. கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி;
    கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்;
உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால்
    யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்;
விள்ளாமற் றீராது முனிவனே! கேள்;
    மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி;   
தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச்
     சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே?

விளக்கவுரை :

    
19. சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும்
    தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு;
மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்;
    வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்?
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
    திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்;
ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது
    அரகரா அந்நேரம் நடக்கை கேளே.

விளக்கவுரை :
    
20. கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை
    கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்;
    பரமான மவுனமது பரத்திற் சாடும்;
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்
    இருந்தசதா சிவமோடி மணியில் மீளும்
கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்
    ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் காவியம், kakapusundar, kakapusundar kaviyam, siththarkal