இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 - 90 of 130 பாடல்கள்

86. எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
          ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
          நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.      

விளக்கவுரை :

மயிலொடு கிளத்தல்

87. ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
          ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
          குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.      

விளக்கவுரை :

88. இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
          இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
          நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.      

விளக்கவுரை :

89. கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
          காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
          பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.

விளக்கவுரை :

அன்னத்தொடு கிளத்தல்

90. சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.   

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 81 - 85 of 130 பாடல்கள்

81. பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
          பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை
          வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற.    

விளக்கவுரை :

82. எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல
          கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
          அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற.   

விளக்கவுரை :

குயிலொடு கிளத்தல்

83. கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
          காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.         
சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
          சந்தோஷ மாகவே கூவுகுயிலே.  

விளக்கவுரை :

84. உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
          உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
          பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.

விளக்கவுரை :

85. சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
          தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
          மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.    

விளக்கவுரை :
Powered by Blogger.