திருமூலர் திருமந்திரம் 726 - 730 of 3047 பாடல்கள்
726. சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம்
அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே
விளக்கவுரை :
727. அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற்
பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
விளக்கவுரை :
[ads-post]
728. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே
விளக்கவுரை :
729. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே
விளக்கவுரை :
730. சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங்
கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே
விளக்கவுரை :