திருமூலர் திருமந்திரம் 581 - 585 of 3047 பாடல்கள்
581. நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும்
வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே
விளக்கவுரை :
582. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே
குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி
எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே
விளக்கவுரை :
[ads-post]
583. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம்
வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே
விளக்கவுரை :
584. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல்
லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே
விளக்கவுரை :
585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள்
நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே
விளக்கவுரை :