திருமூலர் திருமந்திரம் 671 - 675 of 3047 பாடல்கள்
2. அணிமா
671. எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே
விளக்கவுரை :
672. மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற
வல்லார்க்குத்
தந்தின்றி நற்கா மியலோகஞ்
சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே
விளக்கவுரை :
[ads-post]
673. முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண்
ணாதே
விளக்கவுரை :
3. லகிமா
674. ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல
தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே
விளக்கவுரை :
675. மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங்
கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே
விளக்கவுரை :