அகத்தியர் ஞானம் 36 - 40 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

36. பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
          பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
          விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
          காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
          சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

விளக்கவுரை :
           
ஞானம் - 5

37. கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
          கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
          சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
          நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
          துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

விளக்கவுரை :

[ads-post]

38. கூடப்பா துரியமென்ற வாலை வீடு
          கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
          நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
          ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
          செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.

விளக்கவுரை :

39. ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்;
          அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
          உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்;
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு;
          மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்;
          பாடினேன் வேதாந்தம் பாடினேனே.
விளக்கவுரை :

40. பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்;
          பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்;
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்;
          நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்;
          நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்;
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்
          ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே. 

விளக்கவுரை :



அகத்தியர் ஞானம் 31 - 35 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

31. வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
          வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
          தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
          பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
          கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.

விளக்கவுரை :

32. உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
          உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
          உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
          உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
          உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.

விளக்கவுரை :

[ads-post]

33. பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
          பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
          விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
          மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
          பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.

விளக்கவுரை :

34. கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
          காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்       
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
          மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
          சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
          தாயான வத்துவென்றும் பதியின் பேரே. 

விளக்கவுரை :

35. பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
          பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
          பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
          சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
          நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;

விளக்கவுரை :
Powered by Blogger.