இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 61 - 65 of 130 பாடல்கள்

61. பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே.     

விளக்கவுரை :

62. பேய்க்குரங்கு போலப் பேருலகி லிச்சைவைத்து,
நாய்நரிகள் போலலைந்தேன் நன்மையுண்டோ கன்மனமே.    

விளக்கவுரை :

63. இரும்பையிழுக் குங்காந்தத் தியற்கைபோற் பலபொருளை,
விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கன்மனமே.  

விளக்கவுரை :

64. கற்பநிலை யால்லவோ கற்பகா லங்கடத்தல்
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண கன்மனமே.     

விளக்கவுரை :

65. தேக மிழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்,
யோகமட்டுஞ் செய்தாலென் யோசிப்பாய் கன்மனமே.  

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 56 - 60 of 130 பாடல்கள்

56. எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே.   

விளக்கவுரை :

நெஞ்சொடு கிளத்தல்

57. பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக்
காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே.   

விளக்கவுரை :

58. பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே.       

விளக்கவுரை :

59. மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே.         

விளக்கவுரை :

60. பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால்
மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே.

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 51 - 55 of 130 பாடல்கள்

51. மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. 

விளக்கவுரை :

52. தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை
நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே.       

விளக்கவுரை :

53. சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே.      

விளக்கவுரை :

54. மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.    

விளக்கவுரை :

55. பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.      

விளக்கவுரை :
Powered by Blogger.