இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 101 - 105 of 130 பாடல்கள்

101. ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
       ஒட்டியே யூதுகுழல் - கோனே
       ஒட்டியே யூதுகுழல்.  

விளக்கவுரை :

102. மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
       கட்டிவைத் தூதுகுழல் - கோனே
       கட்டிவைத் தூதுகுழல்.         

விளக்கவுரை :

103. கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
       கிட்டாவென் றூதுகுழல் - கோனே
       கிட்டாவென் றூதுகுழல்.       

விளக்கவுரை :

104. பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க
       ஒட்டியே யூதுகுழல் - கோனே
       ஒட்டியே யூதுகுழல்.  

விளக்கவுரை :

105. எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
       தனதாக வூதுகுழல் - கோனே
       தனதாக வூதுகுழல்.   

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 96 - 100 of 130 பாடல்கள்

புல்லாங்குழலூதல்

கண்ணிகள்

96. தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
      இல்லையென் றூதுகுழல் - கோனே
      இல்லையென் றூதுகுழல்.

விளக்கவுரை :
           
97. இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
      அந்தமா யூதுகுழல் - கோனே
      அந்தமா யூதுகுழல்.    

விளக்கவுரை :

98. மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
      கானமா யூதுகுழல் - கோனே
      கானமா யூதுகுழல்.     

விளக்கவுரை :

99. நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
      பேயரென் றூதுகுழல் - கோனே
      பேயரென் றூதுகுழல்.  

விளக்கவுரை :

100. ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
        சாடியே யூதுகுழல் - கோனே
        சாடியே யூதுகுழல்.   

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 91 - 95 of 130 பாடல்கள்

91. காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே. 

விளக்கவுரை :

92. அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே.  

விளக்கவுரை :

93. குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.   

விளக்கவுரை :

94. அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே.        

விளக்கவுரை :

95. காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.        

விளக்கவுரை :
Powered by Blogger.