அகப்பேய் சித்தர் பாடல்கள் 46 - 50 of 90 பாடல்கள்
           
46. கலைக ளேதுக்கடி                           அகப்பேய்
          கண்டார் நகையாரோ
நிலைக ளேதுக்கடி                                அகப்பேய்
          நீயார் சொல்வாயே.

விளக்கவுரை :
           
47. இந்த அமிர்தமடி                              அகப்பேய்
          இரவி விஷமோடி
இந்து வெள்ளையடி                              அகப்பேய்
          இரவி சிவப்பாமே.

விளக்கவுரை :
           
48. ஆணல பெண்ணலவே                     அகப்பேய்
          அக்கினி கண்டாயே
தாணுவு மிப்படியே                               அகப்பேய்
          சற்குரு கண்டாயே.

விளக்கவுரை :
           
49. என்ன படித்தாலும்                          அகப்பேய்
          எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே                           அகப்பேய்
          சும்மா இருந்துவிடு.

விளக்கவுரை :
           
50. காடு மலையுமடி                            அகப்பேய்
          கடுந்தவ மானாலென்
வீடும் வெளியாமோ                             அகப்பேய்
          மெய்யாக வேண்டாமோ.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 41 - 45 of 90 பாடல்கள்
           
41. சைவ மானதடி                               அகப்பேய்
          தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில்                           அகப்பேய்
          சலம்வருங் கண்டாயே.

விளக்கவுரை :
           
42. ஆசை யற்றவிடம்                           அகப்பேய்
          அசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி                                       அகப்பேய்
          எங்ஙனஞ் சென்றாலும்.

விளக்கவுரை :
           
43. ஆணவ மூலமடி                              அகப்பேய்
          அகாரமாய் வந்ததடி
கோணு முகாரமடி                                 அகப்பேய்
          கூடப் பிறந்ததுவே.

விளக்கவுரை :

44. ஒன்று மில்லையடி                          அகப்பேய்
          உள்ள படியாச்சே
நன்றில்லை தீதிலையே                         அகப்பேய்
          நாணமு மில்லையடி.

விளக்கவுரை :
           
45. சும்மா இருந்தவிடம்                        அகப்பேய்
          சுட்டது சொன்னேனே
எம்மாய மீதறியேன்                              அகப்பேய்
          என்னையுங் காணேனே.

விளக்கவுரை :
Powered by Blogger.