அகப்பேய் சித்தர் பாடல்கள் 61 - 65 of 90 பாடல்கள்

61. வாசியி லேறியபடி                         அகப்பேய்
          வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும்                            அகப்பேய்
          வாராது சொன்னேனே.

விளக்கவுரை :
           
62. தூராதி தூரமடி                                அகப்பேய்
          தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ                               அகப்பேய்
          பாழ்வினை தீரவென்றால்.

விளக்கவுரை :
           
63. உண்டாக்கிக் கொண்டதல்ல             அகப்பேய்
          உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ                      அகப்பேய்
          கற்பனை யற்றதடி.

விளக்கவுரை :
           
64. நாலு மறைகாணா                                     அகப்பேய்
          நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில்                             அகப்பேய்
          நற்குரு பாதமடி.

விளக்கவுரை :
           
65. மூல மில்லையடி                                      அகப்பேய்
          முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால்                               அகப்பேய்
          முத்தியு முண்டாமே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 56 - 60 of 90 பாடல்கள்
           
56. பிறவி தீரவென்றால்                       அகப்பேய்
          பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள்                               அகப்பேய்
          சும்மா இருப்பார்கள்.

விளக்கவுரை :
           
57. ஆர லைந்தாலும்                            அகப்பேய்
          நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்                                  அகப்பேய்
          ஒன்றையும் நாடாதே.

விளக்கவுரை :
           
58. தேனாறு பாயுமடி                            அகப்பேய்
          திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி                             அகப்பேய்
          ஒன்றையும் நாடாதே.

விளக்கவுரை :

59. வெள்ளை கறுப்பாமோ                     அகப்பேய்
          வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி                                 அகப்பேய்
          உன்னாணை கண்டாயே.

விளக்கவுரை :
           
60. அறிவுள் மன்னுமடி                         அகப்பேய்
          ஆதார மில்லையடி
அறிவு பாசமடி                                     அகப்பேய்
          அருளது கண்டாயே.

விளக்கவுரை :
Powered by Blogger.