அகப்பேய் சித்தர் பாடல்கள் 81 - 85 of 90 பாடல்கள்
           
81. ஒப்பனை யல்லவடி                        அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே                             அகப்பேய்
          ஆராய்ந் திருப்பாயே.

விளக்கவுரை :
           
82. மோட்சம் வேண்டார்கள்                   அகப்பேய்
          முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                           அகப்பேய்
          சின்மய மானவர்கள்.

விளக்கவுரை :
           
83. பாலன் பிசாசமடி                            அகப்பேய்
          பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                                அகப்பேய்
          காரிய மல்லவடி.

விளக்கவுரை :
           
84. கண்டது மில்லையடி                       அகப்பேய்
          கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                         அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே.

விளக்கவுரை :
           
85. அஞ்சையு முண்ணாதே                   அகப்பேய்
          ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                       அகப்பேய்
          நிஷ்டையிற் சாராதே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 76 - 80 of 90 பாடல்கள்
           
76. சாத்திர மில்லையடி                         அகப்பேய்
          சலனங் கடந்ததடி
பார்த்திட லாகாதே                                அகப்பேய்
          பாவனைக் கெட்டாதே.

விளக்கவுரை :
           
77. என்ன படித்தாலென்                         அகப்பேய்
          ஏதுதான் செய்தாலென்
சொன்ன விதங்களெல்லாம்                  அகப்பேய்
          சுட்டது கண்டாயே.

விளக்கவுரை :
           
78. தன்னை யறியவேணும்                   அகப்பேய்
          சாராமற் சாரவேணும்
பின்னை யறிவதெல்லாம்                      அகப்பேய்
          பேயறி வாகுமடி

விளக்கவுரை :
           
79. பிச்சை யெடுத்தாலும்                      அகப்பேய்
          பிறவி தொலையாதே
இச்சை யற்றவிடம்                              அகப்பேய்
          எம்மிறை கண்டாயே.

விளக்கவுரை :
           
80. கோல மாகாதே                              அகப்பேய்
          குதர்க்கம் ஆகாதே
சால மாகாதே                                     அகப்பேய்
          சஞ்சல மாகாதே.

விளக்கவுரை :
Powered by Blogger.