புலிப்பாணி ஜாலத்திரட்டு 46 - 50 of 211 பாடல்கள்
 

46. மூடவே யிலையாகிக் கொழுந்து மாகி
    முக்கியமாய் தழையாகிப் பூவுமாகித்
தேடவே பிஞ்சாகிக் காயுமாகி
    தெளிவான கனியாகி யுதிரும் பாரு
ஆடவே அனைவா்கும் கொடுக்கச் செய்நீ
    அப்பனே நாழிகைதான் மூணே முக்கால்
கூடவே யிதற்குள்ளே மரமு மாகி
    குணமான கனியாகி யுதிரும் பாரே.
            
விளக்கவுரை :

குழியில் நட்ட மாம்பழக் கொட்டையிலிருந்து இலை, கொழுந்து விட்டு பூ, பிஞ்சு, காய் இவைகளோடு செடியாகி கனியாக உதிரும். உதிரும் கனியை எடுத்து சபையோர்களுக்குக் காட்டி அவா்களிடம் கொடுக்கவும். இவையாவும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் செய்து முடித்துவிட வேண்டும். ஏனெனில் இதற்குள்தான் அது மரமாகி கனியாகி உதிரும். காலம் கடந்துவிட்டால் இந்த ஜாலம் பலிக்காது. மிக எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
     
மணலை  அல்வாவாக செய்யும் ஜாலம்

47. பாரேநீ பாதம்பிசின் பலந்தா னொன்று       
    பண்பான கற்கண்டு பலந்தா னொன்று
கூரேநீ குங்குமப்பூ விராக னரிக்கால்
    கொண்டுவந்து யிம்மூன்றும் பொடியாய்ச் செய்து
சீரேநீ யிதைவேறே வைத்துக் கொண்டு
    சுண்டைப்போ லிருக்குமண லெடுத்துக் காட்டி
தாரேநீ தந்திரமாய் மணலை விட்டு
    தன்மையாய்க் கூட்டுமூன்று மொன்றாய்த் தானே.

விளக்கவுரை :

மணலை அல்வாவாகக் செய்யும் ஜாலம் செய்வதற்கு  முதலில் பாதம்பசின் ஓரு பலம், கற்கண்டு ஓரு பலம், குங்குமப்பூவஅரைக்கால் விராகனெடை ஆகிய இம்மூன்றையும் தூளாகச் செய்து கொள்ளவும். பின்னா் சன்னமாக இருக்கும் மணலை எடுத்து சபையோர்களுக்குக் காட்டிவிட்டு அதனை தந்திரமாக தனக்குள் மறைத்துக் கொண்டு தூளாக்கிக் கொண்டதை எடுத்து ஓரு பீங்கான் தட்டில் கொட்டி சிறிது ஜலம்விட்டு பிசைந்தால் அல்வா போன்று ஆகிவிடும். அதனை சிறிது நேரம் துணியில் மூடிவிட்டு பின்னா் எடுத்து சபையோர்களுக்குக் கொடுத்தால் அவ்வா போன்று ருசியாக இருக்கும்.

இந்திர ஜால வித்தை

48. தானேதா னின்னமொரு ஜால வித்தை
    தயவாகச் சொல்லுகிறேன்  நன்றாய் கேளு
மானேதான் மாயனென்ற பூனை யொன்று
    மைந்தனே பாவையென்ற கீரியொன்று
தேனேதா னிரட்டைவா லறனை யொன்று
    தெளிவான திகைப்பூடு பூச்சிப் பத்து
கேளேதான் பேய்ப்பீா்க்கன் விதை தானப்பா
    குணமாக ரெண்டுபலம் நிறுத்துப் போடே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையை தெளிவாகச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக. மாயப்பூனை அதாவது வெள்ளை முடி ஓன்று கூட இல்லாத கருப்புப் பூனை ஓன்று, கீரிப்பிள்ளை ஓன்று, இரட்டை வால் அறணை ஓன்று,  மின்மினி பூச்சி பத்து, பேய்ப்பீா்கன் விதை இரண்டு பலம் ஆகிய இவைகளுடன் மேலும் -

49. போடவே  புல்லாமணக்கு விதை தானப்பா
    பொங்கமுட னிரண்டுபலம் நிறுத்துப் போடு
ஆடவே யிவையெல்லாம் நறுக்கியப்பா
    அடைவாகப் பேயக்கருப்பஞ் சாற்றிற் போடு
நாடவே ஜாமமது கடந்து வாங்கி
    நலமாக நிலந்தனிலே யுலரப் போடு
கூடவே பானையின் பாலை வாங்கி
    குணமாக ஓரு ஜாம மூறப்போடே.

விளக்கவுரை :

புல்லாமணக்கு விதை இரண்டு பலம் இவைகளையெல்லாம் முறையாக எடுத்துத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு பேய் கரும்புச் சாற்றில் ஊறப்போடவும். பின்னா் ஓரு ஜாமம் நேரமானதும் அதனை எடுத்து தரையில் உலரவைக்கவும். அதன் பின்னா் தும்மட்டிக் காயில் சாறு எடுத்து அந்த சாற்றில் உலர வைத்ததை எடுத்து ஓரு ஜாமம் நேரம் ஊறப்போடவும்.

50. போட்டப்பா விவையெல்லாம் பாண்டத் திலிட்டு
    பொங்கமுடன் பூத்தயிலமாக வாங்கி
தேட்டப்பா யைங்கோலத்  தயிலம் நேரே
    தெளிவாகச் சோ்த்துநீ யரைப்பா யப்பா
தாட்டியா யரைக்கையிலே ரசமும் வெள்ளை
    தயவாக வகைவகைக்கு கழஞ்சிப் போடு
வாட்டமிலா முப்பூவுங் கழஞ்சி போட்டு
    வளமாக வரைத்தெடுத்துச் சிமிழில் வையே.
      
விளக்கவுரை :

இவைகள் எல்லாவற்றையும் ஓரு பாண்டத்திலிட்டு குழித்தைலமாக எடுத்து அதனளவுக்கு ஐயங்கோலத் தைலத்சதைச்  சோ்த்து கல்வத்திலிட்டு  அராக்கவும். அதனை அரைக்கும் போது இரசம், வெள்ளைப் பாடாணம் இவைகளில் வகைக்கு ஓரு கழஞ்சு சோ்த்து முன்னா் கூறிய முப்பூவும் ஓரு கழஞ்சு சோ்த்து நன்றாக மைய அரைத்தெடுத்து  சிமிழில் வைத்துக் கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 41 - 45 of 211  பாடல்கள்
 

41. ஓதியே லட்சமுரு முடிந்த தானால்
    ஓளிவான ஜாலக்கால் பூசைசெய்து
வாதியே பிரம்புகளை  யெடுத்துக் கொண்டு
    வளமாகப் பிரம்புதனால் பெட்டி மேலே
பாதியே யன்பாகத் தட்டுவம்போது
    பாம்பெல்லாம் வெளியாகுங் கண்டு பாரு
தாதியே பிரம்பைத்தான் திருப்பித் தட்டத்
    தானிருக்கும் பெட்டியுள்ள பாம்பு நேறே.

விளக்கவுரை :

ஜாலக்காளை இலட்சம் தடவைகள் உச்சரித்தப் பின்னா் ஜாலக்காளுக்கு பூசை செய்து பிரம்பை எடுத்துக் கொள்ளவும். அந்தப் பிரம்பை ஓரு பெட்டியின் மீது தட்டினால் அதிலிருந்து பாம்பு களாக வெளியே வரும். உடனே பிரம்பைத் திருப்பித் தட்டினால் பாம்புகளெல்லாம் பெட்டியினுள் சென்று மறைந்து விடும்.

தீவட்டி ஜால வித்தை

42. பாரப்பா வெட்டுண்ட முண்டந் தன்னைப்
    பதித்திருக்கு மிடம்பார்த்துப் ஊணை வாங்கி
நேரப்பா திசைப்பூடு பொடித்துப் போடு
    நேரான வைங்கோலத் தயிலஞ் சோ்த்து
தீரப்பா தீவட்டி தனில் நனைத்து
    திறமாகப் பொருத்தி விளக்கெண்ணை வாரு
வீரப்பா ர்க்கால மனிதா் கூடி
    வீராக வருகையிலே சொல்லக் கேளே.  

விளக்கவுரை :

முண்டம் வெட்டுண்டு இறந்து புதைத்த பிணத்தின்  இடத்தை ப் பார்த்து அதனுடைய மாமிசத்தை எடுத்து வந்து அதனுடன் திகைப்பூண்டு தூளைச் சோ்த்து, அதில் ஐங்கோலத் தைலத்தையும் சோ்த்து தீவட்டியில் அதனை நன்றாக நான்கு பக்கமும் நனைத்து அதன்மேல் விளக்கெண்ணெய் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இரவு நேரமானதும் மனிதா் களை வரச் சொல்லி கூட்டமாகச் சோ்த்துக் கொள்ளவும்.

43. கேளடா தீவெட்டிதான் பிடிக்கக்
    கெட்டுதடா வனைவொரு முணட மாவார்
நாளடா கூட்டங்க ளோடிப் போகும்
    நாமென்ன செய்வோமென்று சொல்லி நடுங்குவார்
சூளடா யென்றவிதி யிந்த கூத்து
    சொல்லலா மன்பார்கள் அனைவோருந்தான்
ஆளடா யிச்சாலம் அருமை மெத்த
    அத்தனார் போகருடைய கடாட்சந்தானே. 

விளக்கவுரை :

பின்னா் அந்த தீவட்டியை எரியவிட்டு ஓருவரைக்  கூப்பிட்டு பிடிக்கச் சொல்ல்னால் அவா் முண்டமாகக் காணப்படுவார். இதனால் கூட்த்திலுள்ளவா்கள் பயந்துபோய் ஒடுவார்கள். இதென்ன கூத்தாக இருக்கிறது என அவரவா்கள் பலவிதமாகப் பேசுவார்கள்.இந்த ஜாலவித்தை மிகவும் அருமையானதாகும். இது பேகருடைய கடாட்சத்தினால் நான் தெரிந்து கொண்டேன்.
                                           
சிறிய செடியில் மாம்பழ ஜாலம்

44. பாடினே னின்னமொரு வித்தை கேளு
    பரிவான யேரழிஞ்சி வித்தை தானும்
ஆடியே பூத்தயில மாக வாங்கி
    அன்பான  மாங்கனிதான் கெம்பிலப்பா
சூடியே கனிந்தபழம் கொண்டுவந்து
    சுகமாகப் பிழிந்தனைத் தோலை நீக்கிக்
கூடியே யைங்கோலக் கருவுங் கூட்டிக்
    குணமாகத் தயிலத்தி லூரப் போடே .

விளக்கவுரை :
           
மற்றொரு ஜால வித்தையை சொல்லுகிறேன் கேட்பாயக.  ஏழஞ்சில் விதையைக் கொண்டு வந்து பூத்தைலமாக இறக்கிக் கொண்டு நன்றாகக் கனிந்த மாம்பழத்தை மரத்திலிருந்து பறித்து வந்து அதன் மேல் தோலை நீக்கி நன்றாகப் பிழிந்து அதன் சதைகளை நீக்கிவிட்டு, மாம்பழத்தின் கொட்டையில் ஐங்கோலக் கருவைக் கூட்டி மேற்கண்ட தைலத்தில் ஊறப் போடவும் .

45. போடப்பா ஓருநாள் தான் கடந்து வாங்கிப்
    பொங்கமுட னிழலுா்த்தி வைத்துக் கொண்டு
நாடப்பா சபைதனிலே யிருந்து கொட்டை
    நலமாக யாவருக்குங் கண்ணிற் காட்டி
சாடப்பா குழித்தோண்டி வித்தை நட்டுச்
    சார்வாகச் சலம்வார்த்து கூடைமூடு
ஆடப்பா நாலுதரந் திறந்து மூடே .

விளக்கவுரை :

அந்தத் தைலத்தில் ஓருநாள் ஊறப்போட்டு எடுத்து நிழலில் வைத்து உலா்த்தி அந்த கொட்டையை எடுத்துக் கொள்ளவும். அதை சபையில் அந்த மாங்கொட்டையைக் காட்டி, குழிதோண்டி அந்தக் கொட்டையை நட்டு அதற்கு தண்ணீா் ஊற்றி ஓரு கூடையை அதன் மேல் மூடி விடவும். பின்னா் அதனைத் திறந்து தண்ணீா் ஊற்றி மூடவும். இது போன்று நான்கு தடவைகள் செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 36 - 40 of 211  பாடல்கள்

36. பாரடா பேரிகையும் நகபத்தோடு
    பண்பான நகாறுமுதல் மத்தளந்தான்
சேரடா தம்பட்ட கனக தப்பை
    செயலான தபேலாவும் தவண்டை யப்பா  
கூரடா துத்தி மல்லாரி தாரை
    குணமான பம்பையொடு பூரி யப்பா
தீரடா சந்திரிவாத்தியஞ் சூரியாவாத்தியந்
    தெளிவான வுடுக்கைமுதல் முழங்கு தானே.

விளக்கவுரை :

பாக்கு வெட்டினால் வெட்டுகின்ற போது பேராகை, நகாறு, மத்தளம், தம்பட்டம், கனகதப்பை, தபேலா, தவண்டை, துத்தி, மல்லாரி, தாரை, பம்பை, பூசி, சந்திர வாத்தியம், சூரிய வாத்தியம், உடுக்கை போன்ற வாத்திய இசைகள் கேட்பதோடு, மேலும்-

37. தானென்ற வுடுக்கைமுதல் தப்பையோடு
    தயவான யின்னவெகு வாத்தியங்கள்
கோரென்ற வேரைத்தா னடுக்கடுக்காய்
    கொற்றவனே வெட்டுகையில் முழங்கும் பாரு
தேனேன்ற வாத்தியத்தின் காலம் ஜாலந்
    தெளிவாகக் குருமுறையால் தெளிந்து செய்நீ
ஆனென்ற போகருட கடாட்சத்தாலே
    அடைவாகப் புலிப்பாணி பாடினேனே.  

விளக்கவுரை :

உடுக்கை முதல் தப்பை வாத்திய இசைகளோடு மேலும் பல வாத்திய இசைகள் மேற்கண்ட வேரை வெட்டும் போது கேட்கும். இந்த வாத்திய ஜாலத்தை நன்கு தோ்ந்த குருவின் மூலகத் கற்றுத் தெளிந்து செய்ய வேண்டும். இதனை போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் கூறியுள்ளேன்.

சிவப்பு நிறத்தில் பசுவின் பால் கறக்க

38. நேரப்பா நிட்சயமாய்ச் சொல்லைக் கேளு
    நினைவாகப் பசுவினிடக் கொம்பிலே தான்
சீரப்பா சித்திரமா மூலிவேரை
    சினப்பாக மைபோல ரைத்துக் கொண்டு
நீரப்பா னின்பக்கம் கொம்பிற் பூசி
    நினைவோடு சபைதனிலே பசு நிறுத்தி
ஊரப்பா வுன்பக்கம் பால் சுரக்க
    உனைமெச்சும் வந்தஜனம் வுண்மைதானே.

விளக்கவுரை :

நிச்சயம் வெற்றி தரும் ஜாலவித்தையைக் கூறுகிறேன் கேட்பாயாக. சித்திர மூலம் என்கிற வேரை மை போன்று அரைத்து பசுவின்  இடதுபுறக் கொம்பில் ஆறவிட்டு சபைக்கு கொன்டு வந்து பால் கறக்கும் செம்பை சபையில் கவிழ்த்துக் காட்டிவிட்டு இடதுபுறமாக உட்கார்ந்து உன்பக்கமாக இருக்கும் மடியைப் பிடித்துப் பால் கறந்தால்  சிவப்பு நிறமாக பால் வரும். அதன் பின்னா் பசுவை உள்ளே அழைத்துச் சென்று கொம்பில் பூசியதைக் கழுவிவிட்டு மறுமுறை வந்து பால் கறந்தால் பசுவின் பால் வெண்மையாக வரும்.

பாம்புகளை உண்டாக்கும் ஜாலம்

39. தேனேதா னின்னமொன்று சொல்லக் கேளு
    தயவாகச் சவத்தினுட வாயினுள்ளே
மானேதா னிருப்பாணி யுள்ளே விட்டு
    மைந்தனே மார்பினில்தான் வெள்ளி யாணி
தேனேதா னுந்தியிலே செப்பி னாணி
    தெளிவாக தானடித் தின்னங் கேளு
வானேதான் சவங்கிடந்து வெந்க பின்பு
    வளமாக மறுநாளி லேடுத்துக் கொள்ளே.

விளக்கவுரை :

இன்னொன்று ஜால வித்தையை சொல்லுகிறேன் கேட்பாயக. பிணத்தின் வாயில் இரும்பாணியும்,மார்பில் வெள்ளாணியும் தொப்புளில் செம்பாணியும் வைத்து அந்த பினம் எரிந்து வெந்த பின்னா் மறுநாள் அஸ்தியை கரைப்பதற்குள் முன்னா் வைத்த ஆனிகளை எடுத்து கொள்ளவும்.

40. கொள்ளவே கடாற்று முன்னே நீயுங்
    குணமாகத்  தானெடுத்துப் பூசை செய்து
தெள்ளவே பிரம்பில் வெள்ளிக் கட்டாய் போடு
    தெளிவாக யிரும்புதனை முன்னே போடு
கள்ளவே செம்பதுதான் பின்னே போடு
    கடிதாக வில்லைநீ செய்து பின்பு
அள்ளியே யைங்கோலக் கருவும் பூசி
    அடைவாக ஜாலக்கான் தியான மோதே.

விளக்கவுரை :

ஆற்றங் கரைக்குச் சென்று எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு பூசை செய்துவிட்டு ஓரு பிரம்பில் வெள்ளி ஆணியை முதலில் கட்டாகப் போட்டு இரண்டாவதாக இரும்பு ஆணியை முதலில்  கட்டாட்சகப் போட்டு மூன்றாவதாக செம்பு ஆணியை நடுவில் கட்டாகப் போட்டு மூன்றாவதாக செம்பு ஆணியை நடுவில் கட்டாகப் போட்டு அதன்பின்னா்  அவைகளின்மீது ஐங்கோலத் தைலத்தைப் பூசி பக்தியோடு ஜாலக்காளை தியானம் செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 31 - 35 of 211  பாடல்கள்

 
                                 
31. பாரடா கிராணமது தீண்டும் போது
    பண்பாக நெருப்பிட்டுப் பொங்கலிட்டு
சீரடா பலியிட்டுத் தூப தீபஞ்
    ஜெயமாகக் கொடுத்துமிக வேரை வாங்கி
தீரடா குளிசமா யாடிக் கொண்டு
    திரமாக சிரசுதனில் வைத்து நீயுங்
கூரடா பாரமதை யேற்றிப் பாரு
    குணமாகத் தானெடுக்க கனக்கா தென்றே.

விளக்கவுரை :

கொண்டு வருவதற்கு முன்னா் அந்த செடிக்கு கிராணம் பிடிக்கும் போது அதற்குப் பொங்கலிட்டு, தூபதீபம் காட்டி, பலியிட்டு கிராணம் விடுவதற்கு முன்பாகவே அச்செடியின் வேரை எடுத்து குளிசமாடி சிரசில் வைத்துக் கொண்டு கனத்த பாரத்தைத் தலையில் வைத்தால் பாரம் தெரியாது.

32. கனக்காது உலக்கைமுதல் கட்டிலையா
    கனிவாகப் பல்லாக்கு கொம்பி னோடு
அனக்காது  யிதுகளெல்லாம் நோக்கும் போதில்
    அப்பனே வாயிலிட்டு நோக்கிப் பாரு
இனக்காது ஆனையைத்தான் வாலைப் பற்றி
    இழுத்தாக்கால் பின்னகா்ந்து வரும் பாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தா யானால்
    நகருமப்பா பெரும்பாரம் பின்னைத் தானே.       

விளக்கவுரை :

இதனை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு உலக்கை, பல்லாக்கு, மரங்கள் இவைகளையெல்லாம் கையால் எடுத்தால் கனக்காது அதுமட்டுமின்ற, யானையின் வாலைப் பிடித்து இழுத்தால் யானை பின்னாலேயே நகா்ந்து வரும். பெரிய பாறாங்கல்லை எட்டி உதைத்தால் அக்கல் நகரும். அதனால் பெரும் பாரங்களை எளிதில் தூக்கி ஆச்சரியப்படுத்தலாம்.

மணலை கண்ணில் கொட்டி தேய்கும் வித்தை
                                                                         
33. பாடினேன் யின்னமொரு ஜால வித்தை
    பண்பானப் போ்விளங்கச் சொல்லுகிறவேன் கேளு
நாடியே நத்தைசூரி வேரைக் கண்டு
    நவிலாமல் தாடையிலே மடக்கி கொண்டு
கூடியே கூச்சமெனத் திருந்திடாமல்
    குணமான கண்ணதனில் மணலைப் போட்டு
ஆடியே இருகண்ணும் விரலால் தேய்க்க
    அன்பான கண்ணும் அருகாது பாரே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தைப் பற்றி கூறுகிறேன் கோட்பாயக. இதனைப் பார்ப்பவா்கள் புகழ்வார்கள். நத்தை சூரியன் வேரைக் கொண்டு வந்து கத்திபடாமல் கைகளால் சிறுதுண்டாக்கி அதில் ஓரு சிறிய துண்டை வாயில் போட்டு தாடையில் அடக்கி கொள்ளவும். அதன்பின்னா்  பயப்படாமல் மணலை இரு கண்களிலும் போட்டு கையால் தேய்தால் கண்கள் எரிச்சல் எடுக்காது. உருத்தாது. பார்ப்பவா்களுக்கு வியப்பாக இருக்கம்.

வாத்தியங்கள் முழங்கும் ஜாலம்

34. தானேதா னின்னமொன்று சொல்லக் கேளு                   
    தயவாகப் பள்ளியா்கள் மரண மானால்
கோனேதா னவா்கையி லிரும்பி னாலே
    கொற்றவனே வளையலது போட்டிருப்பார்
தேனேதா னவா்களைத்தான் தகனம் பண்ணத்
    தேருகையில் வளையலுடன் வைப்பார் பாரு
வானேதான் காடாற்ற முன்னே யப்பா
    வகையாகத் தானெடுத்து வைத்துக் கொள்ளே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. பள்ளியா்கள் என்னும் ஓா் வகை ஜாதியினால் எவராவது மரணமடைந்தால் அவா்கள் கையில் அணிந்திருக்கும் இரும்பு வளையத்துடன் தகனம் செய்வார்கள். அதனால்  அவா்களை தகனம் செய்தபின்னா் அவரது அஸ்தியை ஆற்றில் கரைப்பதற்கு முன்னா் அந்த வளையலை கொண்டு வந்து வைத்துக் கொள்ளவும்.

35. கொள்ளப்பா பாக்குவெட்டி யதனாற் செய்து
    கொற்றவனே கிராணமது தீண்டும்போது
தள்ளப்பா சங்கம்வோ் காப்பு கட்டித்
    தயவா பலிபூசை நடத்தி யப்பா
தெள்ளப்பா வடவேரை வாங்கிக் கொண்டு
    தெளிவான வைங்கோலக் கருவு ம் பூசிக்
கள்ளப்பா பாகாகுவெட்டி தன்னால் வெட்ட
    கனிவா வதின்பெருமை சொல்லப் பாரே.

விளக்கவுரை :

கொண்டு வந்த அந்க இரும்பு வளையலை பாக்கு வெட்டி எனும் ஆயுதத்தைச் செய்து கொள்ளவும். கிராணம் பிடிக்கும் போது சங்கம் வேருக்குக் காப்பு கட்டி, பலியிட்டு, பூசைசெய்து வடக்கு நோக்கிச் செல்லும் வேராகப் பார்த்துக் கொண்டு வந்து ஐங்கோலக் கருவைப் பூசி அந்த வேரை செய்து வைத்துள்ள பாக்கு வெட்டியினால் வெட்டவும். வெட்டும் போது ஏற்படுகின்ற ஒசைகளைப் பற்றிக் கூறுகிறேன் கேள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 26 - 30 of 211  பாடல்கள்
 
சீலை குடை பிடிக்க

26. தானென்ற கருவிழிக் காப்பு கட்டி
    தயவாகப்  பொங்கலுடன் பலியுமிட்டு
தேனென்ற திக்கு பந்தனமோ டெட்டுந்
    திறமாகச் செய்து வெட்டிக் கிழங்கு வாங்கி
கோனென்ற சோமனிலே விராக னொன்று
    குணமாகத் தானறுக்கி முடிந்துக் கொண்டு
வானென்ற ஆகாசந் தன்னிற் போட
    வளமாகப் குடைபிடித்து வரும்நீ பாரே.                  

விளக்கவுரை :

கருவிழுதி என்னும் செடிக்கு காப்பு கட்டி அதற்குப் பொங்கலிட்டு பலியிடவும். பின்னா் எட்டு திக்குக்கும் பந்தனஞ் செய்து அதனை அதன் கிழங்கை கொண்டு வந்து சோமன் அல்லது நான்கு சதுரமான சீலையில் ஓரு விராகன் எடைக்கு அதன் கிழங்கை நறுக்கி முடிந்துகொண்டு ஆகாயத்தை நோக்கி மேலே போட்டால் அது குடை பிடித்துக் கொண்டு வருவது போன்று கீழே வரும்.

தேவா்களை காணும் ஜாலம்

27. பாடினே னன்னமொன்று சொல்லக் கேளு
    பாங்கான சிறுமுன்னைக் காப்புக் கட்டி
ஆடியே பொங்கலிட்டுத் தூப தீபம்
    அப்பனே பலிகொடுத்து வேரை வாங்கி
கூடியே பொடியாக்கிக் கருச்சீலை தன்னில்
    குணமாக திரியாக்கி யைங்கோ லத்தால்
வாடியே விளக்கிட்டுத் தீபந் தன்னை
    வளமாக ஆவி நெய்யி லேத்திடாயே.

விளக்கவுரை :

இன்னொரு ஜாலவித்தையைப் சொல்லுகிறேன் கேட்பாயாக. சிறுமுன்னைக்கு காப்புக்  கட்டி, பொங்கலிட்டு, தீபதூபம் காட்டி, பலி கொடுத்து அதன் வேரைக் கொண்டு வந்து நன்குத் தூளாக்கி கருப்பு  சீலையில் (துணியில்) தடவித் திரியாக்கி ஐஙகோலத் தைலத்தில் நனைத்து விளக்கிலிட்டு பசுவின்  நெய் ஊற்றவும்.

28. ஏற்றியே கோவிலுக்குள் மாளிகைக்ககுள்
    இன்பமாய்த் தானிருக்கு மிடத்தி லப்பாா
பாத்தியே மனுக்களைத்தான் வரவழைத்து
    பாரென்று சொல்லி வாய்மூடு முன்னே
வாத்தியே தேவரெல்லாங் கண்ணிற் காணும்
    வையகத்தோற் தான்மயங்கிப் பார்ப்பார் பாரு
சாத்தியே திரியணைக்க மறையும் பாரு
    சார்வாகப் போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

நெய் ஊற்றிய அந்த விளக்கை கோவவவிலுக்குள்ளோ அல்லது மாளிகைக்குள்ளோ எல்லோரையும் வரச் சொல்லி விளக்கை ஏற்றினால் தேவா்களையெல்லாம்  கண்களில் காணலாம். இதனை ப் பார்த்த மக்கள்  ஆச்சியமடைவார்கள். விளக்கின் திரியை அணைத்தால் சகலமும் மறைந்து விடும். இது போகருடைய அருளால் ஏற்படுவதாகும்.

கண்ணாடியை நூலால் அறுக்கும் ஜாலம்

29. கணத்தநல்ல கண்ணாடியை யறப்பதற்கு
    கண்மணிய ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமருக் கிலைதானப்பா
    வண்மையான யதினுடைய ரசத்தை வாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலை வாங்கி
    இரண்டான  ரசத்தினிலே தோய்த் துலா்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலால்
    கண்ணாடி தனையறுக்கத் துண்டாய் போமே.

விளக்கவுரை :

கணத்த கண்ணாடியை அறுப்பதற்கு ரவையும் வேண்டாம். கல்லும் வேண்டாம். காட்டிலே விளையும் முருக்கிலையைக் எடுத்து உலா்தி வைத்து கொண்டு மக்களைக் கூட்டி அவா்கள் முன்னிலையில் ஓரு கண்ணாடியைக் காட்டி இந்த நூலை அறுத்தால் கண்ணாடி அறுத்தால் கண்ணாடி இரண்டு துண்டாகிவிடும்.

நோக்கு வித்தை

30. பாடினே னின்னமொன்று சொல்லக் கேளு
    பண்பான குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கொழிஞ்சியது போல யப்பா
    நாட்டிலே மெத்தவுண் டறியார் பாரு
கூடியே யதைச்சுருட்டி  மேலே யப்பா
    குணமான ஆள்பாராங் கல்லை வைக்க
ஆடியே பார்த்திருக்க அந்தக் கல்தான்
    அப்புரத்திற் போய்விழுங் கண்டு பாரே.

விளக்கவுரை :

இன்னொரு வித்தையான நோக்கு வித்தைப் பற்றிச் சொல்லுகிறேன் கேட்பாயாக. குன்றுடைய தாங்கி அதாவது மலைத்தாங்கி மூலம் என்று கூறப்படுவது போன்று கொழிஞ்சி செடி போல நாட்டில் பல உண்டு. ஆனால் இதனை பலபோ் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த செடியைக் கண்டுபிடித்து அதன் மீது  ஆள் பலமுள்ள பாராங்கல்லை வைத்தால்  அந்தக் கல் அசைந்து அப்பால் போய் விழும். அதனால் இதுதான் அந்த செடி என்று கண்டு கொண்டு வரவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 21 - 25 of 211  பாடல்கள் 


21. ஆவாய்நீ யாணாவாய் பொண்ணு மாவாய்
    அப்பனே ராஜனொடு குருவு மாவாய்
தாவியே சித்தரென்ற முத்த ராவாய்
    தபோதனா்கள் தாமுமாவாய் தவசி யாவாய்
வாவயே குளமாவாய் கிணறு மாவாய்
    வளமான பாம்பாவாய் பட்சியாவாய்
மேவிநீ நினைத்தபடி யெல்லா மாவாய்
    மேதினயி லின்னமொரு புதுவை யாருமே.

விளக்கவுரை :

மேலும் - ஆணாவாய், பெண்ணாவாய், இராஜ குருவாவாய், சித்தா்,முத்தா், தபோனா்கள், தபசி போன்றவா்கள் போன்றாவாய். குளம், கிணறு, பாம்பு, பட்சி இவைகள் போன்று நீ நினைத்தபடியெல்லாம் ஆவாய். இவையெல்லாம் பார்ப்பவா்களுக்கு புதுமையாகத் தெரியும்.

22. ஆமப்பா இஜ்ஜாலஞ் சுருக்கு மெத்த
    ஆரறியப் போகிறா ரருமை மெத்த
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு
    கன்மிகளுக் கென்னாளுங் காணாதப்பா
தாமப்பா யிம்மூலி வாய்ந்த தானால்
    தயிலமிட்டு காற்றில் வைக்க வீரமாகும்
வாமப்பா போகருட கடாட்த்தாலே
    வளமாகப் புலப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இது போன்ற ஜாலவித்தை ஆற்றல் மிக்கது. இதனுடைய அருமையை யார் அறியப்போகிறார்கள். இந்த வித்தை புண்ணியம் செய்தவா்குளுக்குக் கைகூடும் லோபிகளுக்கு ஓருபோதும் கைகூடாது. இந்த மூலிகைக் கிடைத்தால் தைலமாக்கி காற்றில் உலா்தினால் வீரமாதும். போகருடைய அருளினால் புலிப்பாணி யாகிய நான் இதனைக் கூறியுள்ளேன்.

எலுமிச்சம் பழம் அந்தரத்தில் நிற்கும் வித்தை

23. பாரேநீ யின்னமொன்று சொல்லக் கேளு
    பாங்காகக் கா்த்தபந்தான் புணரும்போது
தீரேநீ வால்மயிரை வெவ்வேறே வாங்கி
    திகழு மோதிரம்போல வெவ்வேறே சுற்றித்
தேரேநீ ஐங்காய மேலே பூசித்
    தியமாகத் தங்கத்தை மேலே சுற்றி
கூரேநீ வலவிரலி லாண்தா னப்பா
    குணமான யிடவிரலில் பெண்தான் காணே.

விளக்கவுரை :

இன்னொரு ஜால வித்தையைச் செல்லுகிறேன் கேட்பாயாக. கழுதையானது ஆணும்- பெண்ணும் புணரும் போது அவைகளின் வால் மயிரை தனித்தனியாகக் கத்தரித்து கொண்டு வந்து ஆணின் வால் மயிரைத் தனியாகவும், பெண் வால்மயிரை தனியாகவும் மோதிரம் போன்று சுற்றி வலது விரலில் ஆண் வாலின் மோதிரமும், இடது விரலில் பெண்  வாலின் மயிர் மோதிரமும் போட்டுக் கொள்ளவும்.

24. காணப்பா வெலுமச்சம் பழத்தை வாங்கிக்
    கனிவாகப் பாதரச மதனிற் போட்டு
வானப்பா விடக்கையை கீழே மூடு
    வானிலுள்ள கனியதுதான் வீழா தப்பா
தானப்பா யிடக்கையை நிமிர்த்திக் காட்டத்
    தான்வீழுங் கனியதுதான் கன்டு பாரு
வேணப்பா போகருட கடாட்சத்தாலே
    விதிமாகப் புலிப்பாணி பாடினேனே.    
         
விளக்கவுரை :

ஓரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் சிறிது  துவாரம் போட்டு அந்த துவாரத்தில் பாதரசம் வார்த்து துவாரத்தை நன்றாக மூடிவிடவும். இப்போது இடதுக் கையை மூடிக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை மேலே எரிந்தால் அந்தப் பழம் கீழே விழாமல் மேலேயே இருக்கும். அதன் பின்னா்  இடது கையை நிமிர்த்திக் காட்டினால் மேலே விழாமல் இருந்த எலுமிச்சம் பழம் கீழே வந்து விழும். போகருடைய கடாட்சத்தினால் நான் இதனை உங்களுக்குக் கூறியுள்ளேன்.

சீசாவின் துண்டுகளை மெல்லும் வித்தை

25. பாரப்பா யின்னமொன்று பரிந்து கேளு
    பண்பாய்க் கோபுரந்தாங்கி வேரை வாங்கி
வாரப்பா வாய்தனிலே வைத்தடங்கி
    வண்மையாச்ச்  சபைதனிலே வந்து னின்று
சீரப்பா சீசாவின் ஓடெடுத்துச்
    சிறந்ததொரு வேலையென்று சபைக்குக் காட்டி
கோரப்பா எட்சணியைக் கோடித்தாற்போல்
    கொண்டதொரு ஓடுகளை மென்று பாரே. 

விளக்கவுரை :

இன்னுமொரு ஜாலவித்தைக் கூறுகிறேன் கேள். கோபுரந்தாங்கி எனும் செடியைக் கண்டுபிடித்து அதன் வேரைக் கொண்டு வந்து அதன் வேரை வாயில் வைத்தடக்கி கொண்டு கூட்டத்தினா் முன்னா்  வந்து நின்று சீசாவின் ஓடெடுத்து அதாவது  கண்ணாடி பாட்டில் துண்டு ஓன்றை எடுத்துக்  காட்டி அதனை  வாயில் போட்டு  தூளாக மென்று காட்டி துப்பவேண்டும். இதனை வெகு ஜாக்கிரதையாக இதன் துகள்கள்  வாயின் வழியாக உள்ளே செல்லாமல் பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 16 - 20 of 211  பாடல்கள் 

 
பச்சைப் பாம்பு வித்தை

16. பாடினேன னின்னமொன்று சொல்லக் கேளு
    பண்பான பச்சையென்ற பாம்பைக் கொன்று
ஆடியே யதன்வாயிற் கொட்டை முத்து
    அப்பனே பூநூலின் பருத்திக் கொட்டை
கூடியே யடுக்கடுக்காய் செலுத்திப் போடு
    குணமாக மண்ணிலிட்டு நீரை வாரு
மூடியே வித்தெடுத் திந்தப் பாகம்
    மூன்றுதிரம் போட்டுநீ யெடுத்துக் கொள்ளே.

விளக்கவுரை :

இன்னொரு ஜாலவித்தைப் பற்றி கூறுகிறேன் கேட்  பாயா. ஓரு பச்சைப் பாமபை கொன்று அதன் வாயில் முத்துக் கொட்டை, பருத்திக் கொட்டை ஓன்றன்பின் ஓன்றாய் அடுக்கடுக்காய் உள்ளே செலுத்தி அந்த பச்சைப் பாம்பை மண்ணில் வைத்து அதன் மேல் தண்ணீா் ஊற்றவும். இது போன்று அதன் மேல் தண்ணீா் ஊற்றவும். இது போன்று மூன்று தடவைகள் செய்து எடுத்துக்  கொள்ளவும்.

17. கொள்ளப்பா மூன்றுதிரங் கயற்சி முத்தின்
    குணமான யெண்ணெயதை வடித்து கொண்டு
தெள்ளப்பா மூன்றுதிரம் வெடித்த பஞ்சு
    தெளிவாகத் தானெடுத்துத் திரியாய் செய்து
தள்ளப்பா திரியெடுத்து விளக்கி லேற்றித்
    தணிவாக வைங்கோலத் தயிலஞ் சற்றே
அள்ளப்பா விளக்தனி லிந்தயெண்ணை
    அடைவாகத் தான்வார்த்து தீபமேற்றே.

விளக்கவுரை :

அதனை எடுத்து அதனுள் உள்ள முத்துக் கொட்டயை எடுத்து எண்ணெயாக்கி வடிவமைத்து,  மூன்றுதரம் வெடித்து பஞ்சை  தெளிவாக எடுத்து அதனை திராயாகச் செய்து அந்த  திரியினை  விளக்கில் போாட்டு ஏறறவும். அச்சமயம் ஐங்கோலத் தைலம் கொஞ்சம் சோ்த்து ஊற்றி விளக்கிலுள்ள திரியை  எரிக்கவும்.

18. ஏற்றப்பா ராக்கால மனிதா் கூட்ட
    யிருக்கையிலே பொருந்திவிடு பாம்பாய்த் தோணுங்
கூற்றப்பா  வெகுபாம்பு பச்சைப் பாம்பு
    கொற்றவனே  வெகுபோ்கள் மிரளுவார்கள்
சாற்றப்பா திரியணைக்க மறைந்து போகுஞ்
    சமா்த்துதா னென்ன சொல்ல னிந்தவித்தை
ஆற்றப்பா போகருட கடாட்சத்தாலே
    அடைவாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்தத் திரியை இரவு நேரத்தில் வீட்டில் மனிதா்கள் கூட்டமாக உள்ள இடத்தில் விளக்கில் ஏற்றினால்  வீடு முழுவதும் பச்சைப் பாம்பாகக் காணப்படும்.இதனைக் கண்டதும் எல்லேரும் இதனைக் கண்டு எல்லோரும் பயந்துவிடுவார்கள்.உடனே திரியை அணைத்து விட்டால் எல்லாம் மறைந்து போய்விடும்.இந்த வித்தையை சாமார்த்திய மாகச் செய்யவேண்டும் போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் கூறுயுள்ளேன்.

மூலிகை ஜாலம்

19. பாடினே னின்னமொரு ஜால வித்தை
    பண்பாகச் சொல்லுகிறே னன்றாய்க் கேளு
ஆடியே இருளனென்ற மூலி தன்னை
    அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை
நாடியே காதிலே வைக்கும் போது
    நலமாக ஓருபொருளைச் சொல்லி வைத்தாற்
கூடியே யவ்வண்ண ரூபமாகும்
    குணமான வதன்பெருமை கூறக் கேளே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையை விளக்கமாகக் கூறுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக. இருளி யென்ற மூலிகைக்குக் காப்பு கட்டி அதனைப்  பிடுங்கி வந்து  அம்மூலிகையின்  வேரை ஓரு பொருளைச் சொல்லிக் காதில் வைத்துக் கொண்டால் கூறியப் பொருளைச் சொல்லிக் காதில் வைத்து கொண்டால் கூறியப் பொருளாகவே அது தெரியும். அதனுடைய பெருமையைக் கூறுகிறேன் கேள்.

20. கேளடா புலியாவாய் கரடி யாவாய்
    கொடிதானா குரங்காவாய் மந்தி
நாளடா யெருமைமுத லெருது மாவாய்
    நலமான ஆனையொடு நாயு மாவாய்
ஆளடா பூனையொடு கோழி யாவாய்
    அடைவான குதிரையொடு கழுதை யாவாய்
வாளடா பன்றியாவாய் மானுமாவாய்
    வளமான ஆடுமரங் கல்லாவாயே.

விளக்கவுரை :

அதனைகக் காதில் சொருகிக் கொண்டு நீ நினைக்கின்றபடி புலியாவாய், கரடியாவாய், குரங்காவாய், பெருங் குரங்கான மந்தியாவாய், எருமை, எருது, யானை, நாய், பூனை, கோழி, குதிரை, கழுதை, பன்றி, மான், ஆகிய போன்றவைகளுடன் ஆடு, மரம்,கல்லாவாய்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 11 - 15 of 211  பாடல்கள்


11. சுற்றப்பா ஐங்கோலத் தயிலம் வாரு       
    சுருக்காகச் சிரசோட்டில் மையை வாங்கி
சிற்றப்பா தயிலத்தி லிழைத்து நன்றாய்
    சிமிழில் வைத்து ஜாலக்காள் பூசைசெய்து
அற்றப்பா மையெடுத்து வித்தை யாட
    அடைவாகச் சொல்லுகிறே னன்றாய்க் கேளு
முற்றப்பா பச்சைவைக்கோல் தன்னிற் தேய்த்து
    முன்போடப் பாம்பாகுங் கண்டு பாரே.

விளக்கவுரை :

அந்தத் திரியில் ஐங்கோலத் தைலம்வார்த்து உலரவைத்து உலர்ந்த்தும் மீண்டும் அந்தத் தைலத்தை ஊற்றி தைலம் நன்றாக ஊறியதும் தலை யோட்டுல் வைத்த பமேற்றி மையை வாங்கி சிமிழில் வைத்து ஜாலக்காள்  பூசை செய்து விட்டு அந்த மையை எடுத்து வித்தை செய்யவும் அந்த மையை எடுத்து பச்சை வைக்கோலில் தேய்த்து முன்னே போடப் பாம்பாகத் தெரியும்.

12. பாரடா புளியிலைகுக் குளவியாகும்
    பண்பான வேப்பலேக்குத் தைளை யாகுங்ஞ்
சீரடா நட்டுவக் காலி யாகும்
    சிறப்பான பலகுருவி சிரசிற்பூசிற்
கூரடா அந்தந்தப் பட்சி யாகுக்
    குணமாக ஓட்டிலிட விராக னாகும்
வீரடா  மண்கிள்ளிப் பூசினாக் கால
    விதமான  கெந்த  பொடி வாசந் தானே
 
விளக்கவுரை :


தயாரித்த இந்த மையைக் கையில் பூசிக் கொண்டு புளியிலையை உருவிப் போட்டால் குளவியாகும் இதுபோன்று வேப்பிலையைப் போட்டால் தேளாகும் நட்டுவக்கால்லியாகும் இந்த மையை பல குருவிகளின் இறக்கையில் பூசினால் நீ நினைக்கின்றப் பட்சியாகமாறும் இந்த மையை ஓட்டிலிட்டால் விராகனாகும் சிறிது மண்ணைக் கிள்ளிப் பூசினால் கந்தகப் பொடி வாசனையாக இருக்கும்.   

13. தானென்ற அம்மியிலே பூசினாக்கால்
    தயவான அம்மியது நடக்கும் பாரு
ஊனென்ற கழற்சிக்காய் வேண மட்டும்
    உத்தமனே பூசியதைகீழே போடு
கோனென்ற கழற்சிக்காய் மோதிக்  கொள்ளுங்
    கொற்றவனே சிறுசிலைக்கு மிந்த பாகந்
தேனென்ற போகருட கடாட்சத் தாலே
    தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மையை எடுத்து அம்மியில் பூசினால்அந்த அம்மியானது நகர்ந்து போகும் தேவையான கழற்சிக் காய்களைக் கொண்டு வந்து அந்தக் காய்களில் இந்த மையைப் பூசி கீழே போட்டால் கழற்சிக் காய்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்  கொள்ளும்  இது போன்றே சிறு கூழாங்கற்களுக்கும் செய்யலாம். இதனை எனது குரு போகருடைய அருளினால் தெளிவாகக் கூறியுள்ளேன்.

ஜாலக்காலள் பூசை

14. பாடினேன் ஜாலக்கான் பூசை மார்க்கம்
    பண்பான மஞ்சளின் கிழங்கு பாவை
சூடியே பெண்போலே ரூபஞ் செய்து
    சுகமாகக் கொடிமூல மேலே சுற்றி
ஆடியே பூசையப்பா சத்தி பூசை
    அடைவாகச் செய்தபின் தியான மோது
தேடியே ஜாகினி டாகினி ஜாலக்காள
    தேவிநீ றா... றா... றா... வென்றே யோதே.

விளக்கவுரை :

செய்கின்ற ஜாலங்கள் சிறப்பாக அமைய ஜாலக்காள் பூசை செய்யும் முறையைக் கூறுகிறேன்.மஞ்சளின் கிழங்கை கொண்டு வந்து அதன்  வடிவத்தைப் பெண்போல செய்து அதன்மேலே சித்திரமூலம் கொடியை போட்டுச் சுற்றி சக்தி பூஜை செய். அதன்பின்னா் தியானத்தில் அமா்ந்து "ஜாகினி, டாகினி, ஜாலக்காள், தேவிநீ, றா... றா... றா..." என்று மந்திரம் ஓதவேண்டும்.

15. ஓதவே மந்திரங்கள் லட்சமோது
    உன்னிடத்தில் விளையாடி யிருப்பான் பாரு
வாதமே யிவளுடைய ஜாலம் ஜாலம்
    வையகத்தோ் மதிமயங்கி யிருப்பா ரப்பா
சூதுதான் சொல்லவில்லை ஜால வித்தை
    சொன்னபடி தானாடுங் கண்டு பாரு
நாதனார் போகருட கடாட்சத்திலே
    நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மந்திரத்தை இலட்சம்  முறைகள் ஜெபிக்க வேண்டும். இதனால் அவள் உன்னுடன் விளையாடிக் கொண்டிருப்பாள்.இவளுடைய அருளினால் செய்கின்ற ஜாலங்களைக் கண்டு உலகத்தவா் மயங்கிடுவார். நான் பொய் சொல்லவில்லை. என் சொல்படி செய்தால் வெற்றி நிச்சயம். போகருடைய அருளினால் இதனைக் கூறியுள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 6 - 10 of 211 பாடல்கள் 


6. காணப்பா விந்நூலி யொன்றானாலுங்
    கனிவான சித்தி செய்வோனவனே நாதன்
ஊணப்பா பரதவித்து பார்த்து பார்த்தே
    யுத்தமனே சித்திசெய்ய விதியில்லாதார்
தாணப்பா சாஸ்திரத்தைப் பொய்யென் பார்கள்
    நலமான விதியிருந்தால் பலிக்கும் பாரு
ஆணப்பா ஜகஜ்ஜாலக் கூத்து
    ஆரரியப் போகிறாராப்பா கேளே.

விளக்கவுரை :

இந்நூலில் கூறியுள்ள வித்தைகளில் ஒன்றையாவது மிகச் சிறப்பாகச் செய்பவனே மேலோனாவான். படித்துப் பார்த்து அதனைச் சிறப்பாகச் செய்ய முடியாதவன் சாஸ்திரத்தையே பொய்யானது என்பார்கள். நுணுக்கத்துடன் ஜாலத்தைச் செய்தால் பலிக்கும். இது உண்மையாகும். இதனைக் கூறினால் யார் கவனத்துடன் கேட்கப் போகிறார்கள்.

7. கேளப்பா ஞானமொடு பலதிரட்டு வாடை
    கெணிதமென்ற சோதிடமும் வயித்தியமுங்கூட
வாளப்பா சிதம்பரத்தின் பூசையோடு
    வளமான தேவியுட பூசையப்பா
சூளப்பா ஷண்முகத்தின் பூசை மார்க்கஞ்
    சுகமான சிமிழ்வித்தை கொக்கோகந்தான்
வீளப்பா போகாது சாலம் சாலம்
    வெகுசுருக்கு இருநூறுந் தெளிந்து பாரே.

விளக்கவுரை :

கவனத்துடன் கேட்பாயாக. ஞானம், பலதிரட்டு, வாடை, கணித சோதிடம், வைத்தியம், சிதம்பர பூசை, அருள்பாலிக்கும் அம்மன் பூசை, ஷண்முகத்தின் பூசை, சிமிழ்வித்தை, கொக்கோகம், இவைகளுடன் மாயாசாலம் போன்ற மிக முக்கியமானவை களையெல்லாம் இந்த இருநூறு எனும் நூலில் கூறியுள்ளமையால் ஆராய்ந்து தெளிவுறுவாயாக.

8. பாரடா யெந்நூல்தான் கோர்வையாகப் 
    பார்த்தவர்க்குப் பலனுண்டு சித்தியாகும்
வீரடா பலதிரட்டு ஐங்கோலந்தான்
    விளம்பினோந் தயிலத்தை யெடுத்துக் கொண்டு
சோடா தொழில்முறைக் கெல்லாஞ் சேரு
    செயமாகும் வித்தையெல்லா மென்ன சொல்வேன்
கூறடா கண்கட்டு வித்தை யொன்று
    கூறுகிறே னன்றாகக் கேளு கேளே.

விளக்கவுரை :

நான் இயற்றிய இந்நூலைக் கோர்வையாகப் படித்து  உணர்பவர்களுக்கு நிச்சயம் பலனுண்டாகி சித்தியாகும். பல திரட்டு ஐங்கோலத்தால் சொன்ன தயிலத்தை எடுத்துக் கொண்டு எல்லா ஜால வித்தைகளிலும் சேர்த்தால் எல்லாம் பலிக்கும். ஜெயமாகும். பல வித்தைகள் இருக்கின்றன. இப்போது கண்கட்டு வித்தை ஒன்றைக் கூறுகிறேன் மிகக் கவனத்துடன் கேட்பாயாக.
   
கண்கட்டு வித்தை

9. கேளேநீ யூர்க் குருவி பிடித்து வந்து 
    கெணிதமா யபாணத்தைத் தைத்து பின்னே
சூளேநீ கால்கழஞ்சி சூதம் வாரு
    சுகமாகக் கால்கழஞ்சி வெள்ளை  போடு
வாளநீ வாயைத்தான் தைத்துப் போட்டு
    வளமான சிறு பானைக்குள்ளே போடு
பாளேநீ போகாமற் படிதான் கள்ளு
      பாங்காகத்தான் வார்த்திட் டெரித்திடாயே.

விளக்கவுரை :

ஊர்க்குருவியைப் பிடித்துவந்த் கச்சிதமாக அபான (மலம் கழிக்கும்) வாயைத் தைத்துவிட்டுப் பின்னர் கால் கழஞ்சு இரசம் அதன் வாயில் ஊற்றி, அத்துடன் கால் கழஞ்சு சங்கு பாடாணத்தை கலந்து ஊற்றி அதன் வாயைத் தைத்து கனமான சிறு பானைக்குள் போட்டு அப்பானையில் கள்ளு படி ஊற்றி மேலே மூடி பானையை அடுப்பிலேற்றி எரிக்கவும்.

10. எரிப்பாயே யொருமரத்து விறகு கொண்டு
    எட்டொன்றாய் குறுக்கியே பதத்தைப் பார்த்து
தெரிப்பாயே அஸ்திமுதல் ரோமந் தள்ளி
    தெளிவாகத் தானெடுத்து கல்வத்தி லிட்டுச்
செரிப்பாயே பேய்க்கருப்பஞ் சாற்றை விட்டு
    சேர்த்தரைப்பாய் மைபோலே யாகு மட்டும்
விதமாகக் காயவிட்டுத் திரியாய்ச் சுற்றே.

விளக்கவுரை :

எரிக்கும்போது ஒரே ஜாதி மரத்து விறகினால் எரிக்கவும். அதனை எட்டில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி பதம் பார்த்து எடுத்து, எலும்பு, உரோமம் இவைகளை நீக்கிவிட்டு தெளிவாக எடுத்துக் கல்வத்திலிட்டு அதில் பேய்க்கருப்பஞ் சாறு விட்டு மைபோல அரைத்தெடுத்து ஒரு சுத்தமான துணியின் மேல்பரப்பி நன்றாகக் காயவைத்தெடுத்து அந்தத் துணியை திரியாக்கிக் கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 1 - 5 of 211  பாடல்கள்


காப்பு

1. சத்தியே தயாபரியே ஞான நூலில்
    சாம்பவியே மனோன்மணியே கபாலி சூலி
முத்தியே வேதாந்த பரையே யம்பாள்
    முக்குணமே முச்சுடரே மாயா வீதி
வெற்றியே மூவருக்கு மருளாய் நின்ற
    வேணியே சாமளையே பொன்னே மின்னே
சித்தியே சாலமிகு நூறும் பாடச்
    சின்மயமாங் கணபதிதாள் காப்பாம் பாரே.

விளக்கவுரை :


உலகைக் காத்து இரட்சிக்கும் சத்தியே, தாயே தயாபரியே, ஞான நூல்களில் உச்சரிக்கப்பட்ட சாம்பவியே, மனோன்மணியே, கபாலியே - சூலியே, முக்திக்கு வித்திடும் வேதாந்த பரையே, அம்மையே, முக்குணங்களின் முச்சுடரே, மாயா வீதியே - வெற்றியே, மும்மூர்த்திகளுக்கும் அருள்பாலித்த திருவேணியே, சாமளையே, பொன்னே, மின்னே, சித்தியாகும் ஜாலம் இருநூறு பாடலை இயற்ற அருளிய கணபதியின் பாதமலருக்கு காப்பாம்.

நூலில் உள்ள சிறப்பு


2. பாரப்பா சாலமொடு சல்லி யொட்டியம்
    பாங்கான தொட்டியந் தெட்டான சித்து
சாரப்பா கொடியானு மொடியான் வித்தை
    சார்வான கிரிகருணை யெட்டாரந்தான்
காரப்பா சித்து லட்சங் கலகவித்தை
    கருவான கக்கிஷமும் பஞ்ச பட்சி
வாரப்பா சீனவித்தை மாந்தருக்கும்
    வளமான படுபட்சி கைவல்ய மாமே.

விளக்கவுரை :

இந்நூலில் ஜாலத்தோடு, சல்லியம், ஒட்டியம், தொட்டியம், தொட்டவுடன் நசிந்துப்போகும் சித்து, நொடியான் வித்தை, நாற்பத்தெட்டு மாயவித்தைகள், கக்கிஷம், பஞ்சபட்சி மற்றும் சீன தேசத்து வித்தை, மக்களை வளமாக்கும் படுபட்சி இவைகளை யெல்லாம் எளிமையாகக் கைவரக் கூறியுள்ளேன்.

3. ஆமப்பா பேதர்வண்ணான் கேசரியதீதம்
    அடைவான அஷ்டகர்ம வினோத ஆரூடர்
தாமப்பா கண்டனம் பேதனமுஞ் செப்பு
    தயவான எட்சணியுந் தர்க்க சாஸ்திரம்
போமப்பா பட்சணி தட்சணியுங் கூடப்
    புகழ்வாதஞ் சோதிடம் காவியத்தினோடு
நாமப்பா வைத்தியத்தோ டிலக்கணந்தான்
    நல்ல சூடாமணியு மின்னங் கேளே.
   
விளக்கவுரை :

வண்ணார் வைக்கும் வெள்ளாய் வேகாத சாலம், கழுதை அடியெடுத்து வைக்காத சாலம், அஷ்ட கர்மம், வினோத ஆரூடம், துண்டாக வெட்டும் சாலம், செப்புடு வித்தை, எட்சணி தர்க்க சாஸ்திரம், பட்சணி, தட்சணி, வாதம், சோதிடம், காவியம், வைத்தியம், இலக்கணம், சூடாமணி ஆகிய இவைகளுடன் மேலும் கூறுகிறேன் கேள்.

4. கேளடா சித்தராரூடல் கன்னம்
    கெணிதமாய்ச் சிமிழ்வித்தை கம்பி சூஸ்திரம்
சூளடா சூனியமுந் திறவு கோலுஞ்
    சுகமான மந்திரமு நடுக்குச் சல்லியம்
வாளடா மதனநூற் சாஸ்திரந்தான்
    வளமான பெருநூற் சல்லியம் தாகும்
தாளடா விருப்பென்ற கடலையப்பா
    தயவான மலைநிகண்டு சொல்லக் காணே.

விளக்கவுரை :

சித்தர் ஆரூடம், கன்னம், சிமிழ்வித்தை, கம்பி சூஸ்திரம், சூனியம், திறவு கோல் தந்திரம், மந்திரம், நடுக்கு சல்லியம், மதனநூல் சாஸ்திரம், பெருநூல் சல்லியம், இருப்புக் கடலை, மலையைப் பற்றிய அகராதி ஆகிய இவைகளுடன் மேலும் கூறுகிறேன்.

5. காணவே சித்தசுத்தி யஞ்சல் மந்திரங்
    கருவான கூட்டுடைய கருத்தானப்பா
மாணவே சலமாட்ட நிகண்டு பாவை
    மலைவளம் பூருவமாய் கண்டத்தோடு
ஊணமே கலைக்கியானம் ரேகை வித்தை
    யுத்தமனே யாகமங்கள் விசுவாமித்திரம்
தோணவே யின்னம் வெகுநூல் களுண்டு
    தொழிலான போகருட வருள்தான் காணே.

விளக்கவுரை :


சித்த சுத்தி, அஞ்சல் மந்திரம், கருக்கூட்டு, சலமாட்ட அகராதி, பசுமையான மலை வளம், பூர்வ கண்டம், கலைக் கியானம், ரேகை வித்தை, ஆகமங்கள், விசுவாமித்திரம் இவைகளுடன் இன்னும் பல நூல்களுமுண்டு. இவைகளெல்லாம் எனது குருவான போகருடைய அருளினால் கூறியதாகும்.
Powered by Blogger.