சட்டை முனி சித்தர் பாடல்கள்  96 - 100 of 200 பாடல்கள்

96. தானென்ற வாதியிலே யிருவ ருண்டு;
          சண்டாள வாதியென்றா லுண்டு டுத்து
வானென்ற ஞானமென்ன வேதை பின்பு
          மகத்தான பெண்ணோடே கூடி யாடிக்
கானென்ற ராககே ளிக்கை பார்த்துக்
          கண்டபெண்ணைத் தாய்போலக் கருதிச் சென்றே
ஊனென்ற உடம்பெடுத்துப் போக வென்பான்
          உலுத்தனுக்குச் செனனமென்ற நரகந் தானே.

விளக்கவுரை :

97. நரகமென்ற பெண்மேலே யாசை விட்டு
          நாதாந்த வேதாந்த சிந்தாந் தம்பார்;
நரகமென்ன வுலகமெலா மனத்தில் வைத்து
          நலமான தேவிகிரி யையிலே நின்று
நரகமென்ன சடமுதல்நா மல்லவென்று
          நாட்டினுள்ளே தசதீட்சை கடந்த பின்பு
நரகமென்ற சிவசொத்தை வறுமை தின்று
          நாமறியோம் வாதமென்றே யிருப்பார் காணே.

விளக்கவுரை :

98. இருக்கையிலே சதகோடித் தொழிலைச் செய்வார்;
          இத்தனைக்கும் பொருளெதிவன் வறுமைக் கென்பார்;  
இருக்கையிலே செயநீர்செந் தூரஞ் சுன்னம்
          எடுத்தெடுத்தே யடுக்கிவைப்பார் அநேகங் கோடி;
இருக்கையிலே தொழிலெடுப்பா ரார்க்குக் காட்டார்;
          இல்லையென்பா ருண்டென்பா ரனேகம் பேர்கள்
இருக்கையிலே சதாநித்த மறிவா லூட்டி
          இருப்பார்கள் மவுனமுத்த வாதி யாமே.

விளக்கவுரை :

99. வாதியென்றா லவன்வாதி மவுன வாதி
          மகத்தான பிரபஞ்சத் திருந்தா லென்ன
வாதியென்றால் ரசவாதி ஞான வாதி
          வாங்காமற் சமாதியிலே யிருந்த வாதி
வாதி யென்றால் நிசவாதி நிர்மல வாதி
          வாய்திறக்க அண்டத்தே வாழ்ந்த வாதி
வாதியென்றா லவரிடத்தே சித்தர் செல்வார்
          மயக்குகின்ற செனனமில்லை முத்தி தானே.

விளக்கவுரை :

100. முத்தியிந்த வாதிக்கு வருகு மென்று
          மூச்சு முதற் சிவன்சொன்னா ரென்று சொல்லிப்
பத்தியிந்த சிவசொத்தைப் பெண்ணுக் கீந்து
          பாழான விடயமெல்லாம் பண்ணிப் பண்ணி
அத்தியென்ற பஞ்சகத்தைப் பண்ணிப் பாவி
          ஆங்காரத் தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரக மெய்தி
          மாளுவார் கோடி சென்ம மருளு வாரே.

விளக்கவுரை :



சட்டை முனி சித்தர் பாடல்கள்  91 - 95 of 200 பாடல்கள்

91. ஆடையிலே விண்ணுக்குட் சித்தர் கோடி
          அந்தந்த மலைகளினால் தாக்க வோடி
ஊடையிலே யண்டத்தில் முனிவர் கோடி
          உற்றுநின்ற பதமளவும் ரிடிகள் கோடி
தேடையிலே சதாநித்தம் வேதம் பாரு
          சேர்ந்துநின்ற வோசையிலே தெளியச் சொல்வார்
நாடையிலே யெந்நேரம் மவுனம் நாடு
          நரகமாம் வாசனைதான் நன்றாய்க் கேளு.

விளக்கவுரை :

92. கேளப்பா இதைவிட்டே யுலக ஞானி
          கேட்டதெல்லாஞ் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்!
நாளப்பா செகமெல்லாஞ் சாங்க மென்பான்
          நலமான நூல்பாரான் தீட்சை யாவான்
காளப்பா மவுனமென்பான் விண்ணைப் பார்ப்பான்
          காதகத்தை விட்டுச்சீ வனத்திற் செல்வான்
நாளப்பா தினந்தோறுந் தர்க்கம் பேசி
          நலமான பெண்ணோடு மயங்கு வானே.

விளக்கவுரை :

93. மயங்குவான் பொன்தேடப் புரட்டும் பேசி
          மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;
          சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்;
தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே யென்பான்;
          செகநாத திரோதாயி சிரிப்பாள் பார்த்து;
முயங்குவான் சமாதிவிட் டேனையோ வென்பான்
          மூடமொற்ற ஞானமெல்லா முலகிற் பாரே.

விளக்கவுரை :

94. பாரப்பா சரீரமிது சமாதிக் காக!
          பாழான தூலமிது வென்பார் கோடி
நேரப்பா வாதம்வந்தால் ஞானம் என்று
          நேரப்பா அலைந்தவர்கள் கோடா கோடி;
ஆரப்பா வுலகத்தில் ஞானி யுண்டோ?
          ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா அழுதலோவெள் ளாமை யாகும்?
          ஏரில்லா னறுத்தடித்த கதையு மாச்சு.

விளக்கவுரை :

95. கதையாச்சே யுலகத்தில் ஞானம் வாதங்
          கைகண்டாற் சொல்வாரே கல்போல் நெஞ்சே!
அதையாச்சே யிதையாச்சே யென்று சொன்னால்
          அவன்கையி லொன்றுமில்லை யறிந்து கொள்ளே;
உதையாச்சே அரனுடனே தொழிலே நித்தம்
          உதுவான வன்வாதி யுண்மை கேளு;
சுதையாச்சே ஆனாலும் பொங்கி யுள்ளம்
          சுடுவான்பார் ரசயோகி ஞானி தானே.

விளக்கவுரை :
Powered by Blogger.