இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 - 80 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 - 80 of 130 பாடல்கள்

76. அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே. 

விளக்கவுரை :

சித்தத்தொடு கிளத்தல்

கண்ணிகள்

77. அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
          மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
          மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.

விளக்கவுரை :
           
78. அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
          ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
          சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.    

விளக்கவுரை :

79. ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
          அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
          தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.   

விளக்கவுரை :

80. மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
          முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
          செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal