இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 46 - 50 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 46 - 50 of 130 பாடல்கள்

46. சொல்லென்னு நற்பொருளாம்           பசுவே
          சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை                       பசுவே
          எப்பொருளுஞ் சொல்லுமே.        

விளக்கவுரை :

பலரொடு கிளத்தல்

குறள் வெண்செந்துறை

47. கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

விளக்கவுரை :
           
48. மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே. 

விளக்கவுரை :
           
49. காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே.     

விளக்கவுரை :

50. பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.  

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal