அகத்தியர் ஞானம் 6 - 10 of 49 பாடல்கள்



அகத்தியர் ஞானம் 6 - 10 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

6. மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
          முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
          எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
          பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
          கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.

விளக்கவுரை :

7. மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
          மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
          வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
          வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
          அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே;

விளக்கவுரை :

[ads-post]

8. பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
          படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
          வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
          ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
          குணவியவா னானக்காற் சத்திய மாமே.

விளக்கவுரை :

9. சத்தியமே வேணுமடா மனித னானால்
          சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
          நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
          புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
          கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.

விளக்கவுரை :

ஞானம் - 2

காப்பு

அறுசீர் விருத்தம்

10. மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
          மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
          மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.

விளக்கவுரை :

அகத்தியர் ஞானம், அகத்தியர், agathiyar, agathiyar nganam, siththarkal