கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 6 - 10 of 35 பாடல்கள்


கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 6 - 10 of 35 பாடல்கள்

6. தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.

விளக்கவுரை :

7. நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

விளக்கவுரை :

8. நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

விளக்கவுரை :

9. வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

விளக்கவுரை :

10. பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே.

விளக்கவுரை :

கடுவெளிச் சித்தர், கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு, kaduveli siththar, kaduveli siththar aanandha kalippu, siththarkal