வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 6 - 10 of 16 பாடல்கள்



வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 6 - 10 of 16 பாடல்கள்

6. தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
          சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு       
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
          உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
          திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
          காரணத்தை யறியாமல் கதறு வாரே.

விளக்கவுரை :

7. கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
          காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
          பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
          உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
          சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 

விளக்கவுரை :

8. நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
          நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
          வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
          கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
          தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

9. தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
          தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
          உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
          மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
          திரட்டினார் வெகுகோடி தேச பாஷை

விளக்கவுரை :

10. தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
          தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்; 
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
          ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
          வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
          நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

விளக்கவுரை :

வால்மீகர் சித்தர், வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம், vaalmeegar siththar, vaalmeegar siththar soothira gnanam, siththarkal