அகத்தியர் ஞானம் 11 - 15 of 49 பாடல்கள்



அகத்தியர் ஞானம் 11 - 15 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

உயர் ஞானம்

எண்சீர் விருத்தம்

11. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
          உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
          பேணிவலம் நோக்கி அவத்தில் நில்லு;
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
          தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
          மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.

விளக்கவுரை :

தனி ஞானம்

12. ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
          உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
          விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
          பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
          கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;

விளக்கவுரை :

[ads-post]

13. விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
          விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
          ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
          சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
          மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.

விளக்கவுரை :

14. மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
          முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
          சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
          செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
          நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.

விளக்கவுரை :
         
ஞானம் - 3

15. பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
          பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
          ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
          கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து
          தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.

விளக்கவுரை :

அகத்தியர் ஞானம், அகத்தியர், agathiyar, agathiyar nganam, siththarkal