பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 116 - 120 of 129 பாடல்கள்
           
116. ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
          உள்ளும் புறம்பையு மறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே
          ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்கால மில்லாமற் தாணு வோடே
          சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்
தூங்காமல் தூங்கியே சுக மடைந்து
          தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

117. விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
          வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்
          காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
          சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்
          ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

118. காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
          கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
          நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னி லேறி
          மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
          ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

119. மூலத் தலத்திலே நின்ற கருத்தை
          முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
          வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
          பரகதி ஞானசொ ரூபமாகி
ஆலச் சயனத்து மாலுட னின்றே
          ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

120. புலனைந்து வீதியில் வையாளி பாயும்
          புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி
மலபுந்த வுலகங் கடந்த தாலே
          மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்
தலமைந்து பூலோகங் கடந்த தாலே
          சந்திர மண்டலமுங் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
          ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :



பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 129 பாடல்கள்

111. இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்
எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்
வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. 

விளக்கவுரை :

எண்சீர் விருத்தம்

112. ஆகார முதலிலே பாம்ப தாக
          ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
          ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
          சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
          மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

113. தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
          தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
          மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
          அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
          இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

114. களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே
          கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி
          அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி
          வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்
          சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

115. உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
          உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
          வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
          கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
          சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :
Powered by Blogger.