இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 31 - 35 of 130 பாடல்கள்

31. வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
          மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
          நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே.    (தாந்)

விளக்கவுரை :

32. ஆறா தாரத்தெய் வங்களை நாடு
          அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
          கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு.    (தாந்)

விளக்கவுரை :

நாராயணக்கோன் கூறுதல்

33. ஆதி பகவனையே                           பசுவே
          அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான்                                 பசுவே
          சொந்தம தாகாதோ.

விளக்கவுரை :

34. எங்கும் நிறைப்பொருளைப்              பசுவே
          எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில்                                பசுவே
          சந்ததஞ் சாருவையே.

விளக்கவுரை :

35. அல்லும் பகலும் நிதம்                     பசுவே
          ஆதி பதந்தேடில்     
புல்லு மோட்சநிலை                              பசுவே
          பூரணங் காண்பாயே.

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 26 - 30 of 130 பாடல்கள்

26. அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
          அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
          சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன்.       (தாந்)

விளக்கவுரை :

27. மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
          வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
          ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே.        (தாந்)

விளக்கவுரை :

28. பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
          பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்        
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
          சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன். (தாந்)

விளக்கவுரை :

29. அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
          அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
          மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன். (தாந்)

விளக்கவுரை :

30. மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
          மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
          மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே.    (தாந்)

விளக்கவுரை :
Powered by Blogger.