அகப்பேய் சித்தர் பாடல்கள் 56 - 60 of 90 பாடல்கள்
           
56. பிறவி தீரவென்றால்                       அகப்பேய்
          பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள்                               அகப்பேய்
          சும்மா இருப்பார்கள்.

விளக்கவுரை :
           
57. ஆர லைந்தாலும்                            அகப்பேய்
          நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்                                  அகப்பேய்
          ஒன்றையும் நாடாதே.

விளக்கவுரை :
           
58. தேனாறு பாயுமடி                            அகப்பேய்
          திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி                             அகப்பேய்
          ஒன்றையும் நாடாதே.

விளக்கவுரை :

59. வெள்ளை கறுப்பாமோ                     அகப்பேய்
          வெள்ளியும் செம்பாமோ
உள்ள துண்டோடி                                 அகப்பேய்
          உன்னாணை கண்டாயே.

விளக்கவுரை :
           
60. அறிவுள் மன்னுமடி                         அகப்பேய்
          ஆதார மில்லையடி
அறிவு பாசமடி                                     அகப்பேய்
          அருளது கண்டாயே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 51 - 55 of 90 பாடல்கள்
           
51. பரத்தில் சென்றாலும்                       அகப்பேய்
          பாரிலே மீளுமடி     
பரத்துக் கடுத்தவிடம்                            அகப்பேய்
          பாழது கண்டாயே.

விளக்கவுரை :
           
52. பஞ்ச முகமேது                               அகப்பேய்
          பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி                                   அகப்பேய்
          குருபாதங் கண்டாயே.

விளக்கவுரை :
           
53. பங்க மில்லையடி                           அகப்பேய்
          பாத மிருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம்                   அகப்பேய்
          கண்டு தெளிவாயே.

விளக்கவுரை :
           
54. தானது நின்றவிடம்                        அகப்பேய்
          சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே                             அகப்பேய்
          ஊனமொன் றில்லையடி.

விளக்கவுரை :
           
55. சைவம் ஆருக்கடி                           அகப்பேய்
          தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம்                                அகப்பேய்
          சற்குரு பாதமடி.

விளக்கவுரை :
Powered by Blogger.