உரோம ரிஷி சித்தர் ஞானம் 1 - 5 of 13 பாடல்கள்

எண்சீர் விருத்தம்

1. மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
          முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
          வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
          கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
          நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே.

விளக்கவுரை :

2. கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
          கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
          வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
          ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
          பேரின்ப முத்திவழி பேசுவேனே.

விளக்கவுரை :

3. பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
          பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
          நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
          காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
          சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே.

விளக்கவுரை :

4. வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
          வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
          உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
          சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
          எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே.

விளக்கவுரை :

5. பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
          பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
          நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;    
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
          குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
          அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.

விளக்கவுரை :



அகப்பேய் சித்தர் பாடல்கள் 86 - 90 of 90 பாடல்கள்
           
86. நாதாந்த வுண்மையிலே                   அகப்பேய்
          நாடாதே சொன்னேனே
மீதான சூதானம்                                   அகப்பேய்
          மெய்யென்று நம்பாதே.

விளக்கவுரை :
           
87. ஒன்றோ டொன்றுகூடில்                   அகப்பேய்
          ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும்                                 அகப்பேய்
          நில்லாது கண்டாயே.

விளக்கவுரை :
           
88. தோன்றும் வினைகளெல்லாம்          அகப்பேய்
          சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும்                      அகப்பேய்
          சுத்த வெளிதனிலே.

விளக்கவுரை :
                   
89. பொய்யென்று சொல்லாதே               அகப்பேய்
          போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள்                 அகப்பேய்
          வீடு பெறலாமே.

விளக்கவுரை :
           
90. வேத மோதாதே                              அகப்பேய்
          மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே                                    அகப்பேய்
          பாவித்துப் பாராதே.

விளக்கவுரை :

அகப்பேய் சித்தர் பாடல்கள் முற்றும்
Powered by Blogger.