வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 11 - 16 of 16 பாடல்கள்

11. சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
          திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
          சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
          அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
          நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். 

விளக்கவுரை :

12. நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
          நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
          தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
          வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
          நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே.

விளக்கவுரை :

13. காணரிதே யெவராலு மிருசு வாசம்;
          காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
          பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
          காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
          சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா.

விளக்கவுரை :

14. சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
          சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;    
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
          சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
          காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
          ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே.

விளக்கவுரை :

15. காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
          காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
          என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
          அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
          சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. 

விளக்கவுரை :

16. தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
          தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
          வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
          சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
          குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.

விளக்கவுரை :

வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் முற்றும்



வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 6 - 10 of 16 பாடல்கள்

6. தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
          சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு       
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
          உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
          திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
          காரணத்தை யறியாமல் கதறு வாரே.

விளக்கவுரை :

7. கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
          காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
          பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
          உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
          சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 

விளக்கவுரை :

8. நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
          நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
          வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
          கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
          தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

9. தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
          தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
          உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
          மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
          திரட்டினார் வெகுகோடி தேச பாஷை

விளக்கவுரை :

10. தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
          தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்; 
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
          ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
          வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
          நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

விளக்கவுரை :
Powered by Blogger.