போகர் சப்தகாண்டம் 3351 - 3355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3351. திண்ணமா மின்னமொரு கருமானங்கேள் திகழான வர்ணமென்ற போக்குசொல்வோம்
வண்ணமுடன் பஞ்சவர்ண விதங்கள் சொல்வோம் வகுப்புடனே யதிற்பிறந்த வர்ணம் நான்காம்
நண்ணமுடன் வாயுவென்ற இரும்புதன்னில் நலமான வர்ணமது ரூபபேதம்
கண்ணபிரான் வர்ணமது போலேயாகும் காசினியில் சித்தர்செய்யும் வேதையாச்சே

விளக்கவுரை :


3352. வேதையிலே இன்னமொரு போக்கைக்கேளும் வீறான சிறியகண்ணாகந்தானு
தீதையிலே தானுருக்கி மதியுப்போடு திகழான களங்குபோல் உருகும்பாரு
போகமுடன் சூதமதைக் கூடச்சேர்த்து பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நாகமுடன் சாரமென்ற செயநீர்தன்னால் நளினமுடன் தானரைத்து செப்பக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3353. செப்பவென்றால் வளையலுப்பு கூடச்சேர்த்து சிறப்புடனே நிம்பழச்சார் தானும்விட்டு
ஒப்பமுடன் வெந்நீரில் கலக்கிக்கொண்டு ஓங்குபெற செம்பென்ற கட்டைதானும்
நெப்பமுடன் தகடடித்து சலத்திற்போடே நேரான வர்ணமது மேலேதாவி துப்புரவாய்
ஒளிவீசுந் தகட்டின்மேலே சூரியன்போல் தங்கமென்ற வர்ணமாமே

விளக்கவுரை :


3354. ஆமேதான் வர்ணமொடு சிவப்புபச்சை அப்பனே நீலமென்ற கருப்புதானும்
தாமேதான் ரசமதனைக் கூடச்சேர்த்து தன்மையுடன் சீசாவிலடைத்து மைந்தா
வேமேதான் தகடதனைத் தோய்க்கும்போது விதமான சஞ்சாயவர்ணங்காணும்
நாமேதான் சொன்னபடி ரூபவர்ணம் நயமுடனே தகடதனில் ஏறும்பாரே

விளக்கவுரை :


3355. பாரேதான் இரும்புக்கு இந்தமார்க்கம் பாகமுடன் செய்துவந்தால் பண்பதாகும்
நேரேதான் வங்கமது தகடடித்து நேரான முன்சொன்ன சரக்கிலேதான்
வாரேதான் வங்கமதை யுருக்கியேதான் வளமுடனே காய்ச்சியல்லோ தோய்ச்சிப்பாரு
கூரேதான் துரிசியிட காரத்தாலே கொற்றவனே பலபேதம் விளையுந்தானே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3346 - 3350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3346. போட்டவுடன் தீமூட்டி புடந்தான்போடு பொன்னவனே மூன்றுநாளாறுமட்டும்
தாட்டிகமாய் தனையெடுத்து பார்க்கும்போது சட்டமுடன் செந்தூரம் அருணன்போலாம்
மாட்டிமையாய் இந்தமுறை ஐந்துபத்து மயங்காமல் தான்போட வரிசைகேளு 
பாட்டினது முறையேனும் பொய்யுமாகா பாரினிலே கொங்கணவர்பாகமாமே

விளக்கவுரை :


3347. பாகமாங் கொங்கணவர் பாகந்தானும் பாரினிலே யாரேனும் செய்ததுண்டோ
கோபமாய் முனிசொன்னவாக்குபொய்யோ கொற்றவனே கொங்கணவர் வாக்குபொய்யோ
ஏகவழி தனைக்கடந்த ஞானசித்து ஏற்றமுடன் மானிடர்கள்பிழைக்கவென்று
சாகமுடன் செய்துவைத்தார் இந்தபாகம் சட்டமுடன் கொங்கணவர் நாதர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3348. தானான செந்தூரமென்ன சொல்வேன் தாரிணியில் மாமுனிவர் ரிஷிகள்தாமும்
தேனான பாகமிது கைபாகந்தான் தேற்றமுடன் ஆராய்ந்து கேள்விகேட்டு
கோனான எனதையர் காலாங்கிநாதர் சொன்னவள வாக்குணமுங்கண்டு
பானான செந்தூரப்பாகங்கண்டு பாரினிலே சந்தேக நீங்கினாரே

விளக்கவுரை :


3349. நீங்கினார் கொங்கணவர் கைபாகத்தில் நீடாழி காலம்வரை நுணுக்கம்பார்த்து
தூங்கியே திரியாமல் சித்துதானும் துறையோடும் முறையோடுஞ் செய்துகொண்டார்
ஓங்கியே பாகமது கைவிடாமல் வுத்தமனே செய்துமல்லோ குளிகைபூண்டு
ஏங்கியே போகாமல் மைந்தாநீயும் எழிலுடனே இப்பாகம் செய்திடாயே

விளக்கவுரை :


3350. செய்யவென்றால் வெகுகோடி மாந்தர்தாமும் செம்மையுடன் செய்துமல்லோ முறைதான்காணார்
பையவே கருவாளி செய்வான்பாரு பாரினிலே மற்றவரே காணார்காணார்
நையவருங் கோபத்தார் செய்யமாட்டார் நாட்டிலுள்ள சாத்மீகர் செய்வார்பாரு
துய்யவே வாதவித்தை செய்வார்தாமும் துப்புரவாய் செய்வதுவும் திண்ணமாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3341 - 3345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3341. உடைத்து மிகப்பார்க்கையிலே என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ரிஷிகள்வேதை
புடைத்துமே சத்துகளை தானெடுத்து புகழாக கல்வமதிலிட்டு மைந்தா
படைப்புடன் வீரமென்ற செயநீர்தன்னால் களிப்புடனே தானரைப்பாய் சாமம்நாலு
படைப்புடனே பில்லைதட்டி காயவைத்து பாங்குபெற வோட்டிலிட்டு சீலைசெய்யே

விளக்கவுரை :


3342. சீலையென்றால் ஏழுசீலைவலுவாய்செய்து சிறப்புடனே செம்மண்ணைமேலேபூசி
காலைதனில் கெஜபுடத்தில் போட்டுமல்லோ கருவாக மூன்றுநாள் பொறுத்தபின்பு
மாலையென்னும் மூன்றாம்நாள் மாலையப்பா மயங்காமல் தானெடுப்பாய் மைந்தாநீயும்
வாலையென்னும் திரிபுரையாம் புவனைவாலை தண்மையுடன் தானினைத்து எடுத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

3343. எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான செந்தூரமெத்தமெத்த
அடுத்துநின்ற பேர்களைநீ தூரத்தள்ளி அப்பனே செந்தூரமெடுத்துக்கொண்டு
தொடுத்தகுறி தப்பாமல் பின்னுங்கேளு தோராமல் கல்வமதிலிட்டு மைந்தா 
கொடுத்துமே முன்சொன்ன செயநீர்தன்னால் கொப்பெனவே தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


3344. எட்டான சாமமது வரைக்கும்போது எழிலான வெண்ணையது போலேயாகும்
கட்டான சூதமது நாலாய்ச்சேர்த்து கருவாகத் தானரைப்பாய் சாமம்ரெண்டு
மட்டான பில்லையது சிறுகத்தட்டி மதிப்பான ரவிதனிலே காயவைத்து
தட்டான பதிதனிலே குழிதான்வெட்டி தகமையுடன் புடம்போட வமிசைகேளே

விளக்கவுரை :


3345. வரிசையென்றால் வரிசையது செப்பக்கேளும் வாகுடனே குழிதனிலே மணல்தான்கொட்டி
சரியான மண்மேலே வுப்பைக்கொட்டி சார்பாக பில்லைதனை மேலேவைத்து
பரிவுடனே மேலுமந்த வுப்பைக்கொட்டி பண்புடனே மணல்தனை மேல்பரப்பி
குறியான குறிப்பதுபோல் வுமிதான்கொட்டி கொற்றவனே மேல்தனிலே எருவுபோடே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3336 - 3340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3336. பாரேதான் பாஷாணஞ் சரக்குசேர்த்து பாகமுடன் தானுருகி கரியாய்நிற்கும்
நேரேதான் பூநாகம் மண்ணைப்போக்கி நேர்மையுடன் சத்துக்கு நேர்சேராக
கூரேதான் வினயமுடன் ஒன்றாய்ச்சேர்த்து கொற்றவனே கல்வமதில் இட்டுப்பின்பு
வேறேவான் ஆவின்நெய் தன்னாலாட்டி வேகமுடன் மூசைதனில் அடைத்திடாயே

விளக்கவுரை :


3337. அடைக்கவென்றால் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து அப்பனே சில்லிட்டுச் சீலைசெய்து
தடையறவே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் சரவுலையில் வைத்துவூது
மடைபோன்ற தீயதனால் வெந்துசத்தாய் மார்க்கமுடன் ஈயம்போல் உருகிநிற்கும்
இடைநடுவே களங்கமதை எடுத்துக்கொண்டு எழிலான தங்கமது நேர்தான்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

3338. கூட்டியே தானுருக்கி யெடுத்துக்கொண்டு கஒற்றவனே கல்வமதி லிட்டுமைந்தா
தாட்டிகமாய் பொற்றலையின்சாற்றினாbலெ தண்மையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி நேர்புடனே ரவிதனிலே காயவைத்து
வாட்டமுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து வளமையுடன் சரவுலையிலேற்றிடாயே 

விளக்கவுரை :


3339. ஏற்றியே வுருக்குமுகம் தன்னிலேதான் என்மகனே துருத்தியது நாலதாகும்
போற்றியே வாலாம்பிகை தனைநினைத்து பொங்கமுடன் மூசைதனை நெருப்பிலிட்டு
தூற்றியே கரியதனை மேலேகொட்டி துப்புரவாய் மூசையது யழுகுமட்டும்
நாற்றிசையும் தீபரக்க வூதுவூது நாயகனே சத்தெல்லாம் முத்துமாமே

விளக்கவுரை :


3340. முத்தான சத்ததுவுஞ்சொல்லப்போமோ மூதுலகில் யாரேனுங் கண்டதுண்டோ
சித்தான முனிரிஷிகள் செய்யும்வேதை தேசத்தில் மற்றவரால் செய்யப்போமோ
வித்தான களங்கமது காயகற்பம் விண்ணுலகில் கருவாளி செய்வான்பாரு
சத்தான சத்துதனை யெடுத்துமைந்தா சார்புடனே மூசைதனை யுடைத்துப்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.