போகர் சப்தகாண்டம் 3341 - 3345 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3341 - 3345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3341. உடைத்து மிகப்பார்க்கையிலே என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ரிஷிகள்வேதை
புடைத்துமே சத்துகளை தானெடுத்து புகழாக கல்வமதிலிட்டு மைந்தா
படைப்புடன் வீரமென்ற செயநீர்தன்னால் களிப்புடனே தானரைப்பாய் சாமம்நாலு
படைப்புடனே பில்லைதட்டி காயவைத்து பாங்குபெற வோட்டிலிட்டு சீலைசெய்யே

விளக்கவுரை :


3342. சீலையென்றால் ஏழுசீலைவலுவாய்செய்து சிறப்புடனே செம்மண்ணைமேலேபூசி
காலைதனில் கெஜபுடத்தில் போட்டுமல்லோ கருவாக மூன்றுநாள் பொறுத்தபின்பு
மாலையென்னும் மூன்றாம்நாள் மாலையப்பா மயங்காமல் தானெடுப்பாய் மைந்தாநீயும்
வாலையென்னும் திரிபுரையாம் புவனைவாலை தண்மையுடன் தானினைத்து எடுத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

3343. எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான செந்தூரமெத்தமெத்த
அடுத்துநின்ற பேர்களைநீ தூரத்தள்ளி அப்பனே செந்தூரமெடுத்துக்கொண்டு
தொடுத்தகுறி தப்பாமல் பின்னுங்கேளு தோராமல் கல்வமதிலிட்டு மைந்தா 
கொடுத்துமே முன்சொன்ன செயநீர்தன்னால் கொப்பெனவே தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


3344. எட்டான சாமமது வரைக்கும்போது எழிலான வெண்ணையது போலேயாகும்
கட்டான சூதமது நாலாய்ச்சேர்த்து கருவாகத் தானரைப்பாய் சாமம்ரெண்டு
மட்டான பில்லையது சிறுகத்தட்டி மதிப்பான ரவிதனிலே காயவைத்து
தட்டான பதிதனிலே குழிதான்வெட்டி தகமையுடன் புடம்போட வமிசைகேளே

விளக்கவுரை :


3345. வரிசையென்றால் வரிசையது செப்பக்கேளும் வாகுடனே குழிதனிலே மணல்தான்கொட்டி
சரியான மண்மேலே வுப்பைக்கொட்டி சார்பாக பில்லைதனை மேலேவைத்து
பரிவுடனே மேலுமந்த வுப்பைக்கொட்டி பண்புடனே மணல்தனை மேல்பரப்பி
குறியான குறிப்பதுபோல் வுமிதான்கொட்டி கொற்றவனே மேல்தனிலே எருவுபோடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar