6686. கூறினார் வாதநூல்
அனேகஞ்சொல்லி குணமான பாகமதை விட்டறுத்து
தேறினார் நூல்களெல்லாம்
முன்பின்னாக தஏற்றமுடன் கைமறைப்பாய்க்கட்டறுத்து
மீறியே சிலநூலில் உண்மைகூறி
மிக்கான செய்பாகம் வேரறுத்து
சீறியே மாணாக்கர்
தமைச்சினந்து சீரறுத்து வாரறுத்து திகைத்திட்டாரே
விளக்கவுரை :
6687. திகைத்ததொரு நூல்களெல்லாம்
உளவாராய்ந்து தீர்க்கமுடன் காலாங்கிப் பதம்பணிந்து
பகைத்தொரு சித்தர்களைக்
கரங்குவித்து பட்சமுடன் அஞ்சசிகள் மிகவுஞ்செய்து
வகையுடனே குளிகையது
பூண்டுமல்லோ வளமான சீனபதி அடியேன்சென்று
தகமையுடன் குருபரனார்
பதாம்புயத்தை தாள்பணிந்து சதாகாலந் தரிசித்தேனே
விளக்கவுரை :
[ads-post]
6688. தெரிசித்தேன் சமாதிமுகம்
மதிவாய்நின்று தேற்றமுடன் குருவணக்க மதிகங்கூறி
புரிசடையோன் பதாம்புயத்தை மனதிலெண்ணி
பூபாலா காலாங்கிநாதர்பாதம்
தெரியாத எந்தனுக்கு உகமைகூறி
தெளிவான உபதேசம் மிகவேநண்ணி
சரியான சமாதியது பெறவேவேண்டி
சட்டமுடன் வருளெனக்கு அருளென்றேனே
விளக்கவுரை :
6689. என்றதொரு வாக்கதுவும்
கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தாமும்
தென்றிசையில் கும்பமுனி
நாதருக்கு தேற்றமுடன் தரிசனைகள் தந்தாற்போல
சென்றதொரு எந்தனுக்கு
வாசீர்மங்கள் தெளிவாக மனதுவந்து வதிகங்கொண்டு
கன்றழுகுங் காலமதில்
தாயுவந்து கடும்பசிக்கு பால்கொடுத்த கதையைப்போலாச்சே
விளக்கவுரை :
6690. ஆச்சப்பா எந்தனுக்கு உபதேசங்கள் அவனிதனில் ஆரதுதான் சொன்னாரில்லை
மூச்சடங்கி சென்றதொரு
காலாங்கிநாதர் முனையாக எந்தனுக்கு உண்மைகூறி
மாச்சலுடன் சமாதிமுகந்
தானிருந்து மன்னவனே கருவிகரணாதியந்தம்
ஏச்சலது வாராமல் பெற்றுமல்லோ
எழிலான சீனபதி கடந்திட்டேனே
விளக்கவுரை :