6916. மன்னாகேள் திருவானைக்
காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன்
நன்னயமாய் யதைச்சார்ந்த
தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும்
தென்னாடன் கும்பமுனி
அகஸ்தியன்தான் தேவதாகிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன்
முன்னேதான் பெரியோர்கள்
உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே
விளக்கவுரை :
6917. வரையான வகஸ்தியனார் ஸ்தலமொன்றுண்டு வளமான கோர்வையது இன்னஞ் சொல்வேன்
திறையான சத்தமது
மூன்றேயாகும் திகழான வட்டமது நான்கேயாகும்
குறையாத நந்தியது
கோட்டையப்பா கொற்றவனார் மலயருகே சுற்றியுண்டு
முறையான வகஸ்தியனார்
தேவஸ்தானம் முனையான லக்கமிது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
[ads-post]
6918. ஒண்ணாது திருக்கடையூர்
தேவஸ்தானம் வுத்தமனே கோர்வையது என்னசொல்வேன்
திண்ணமுடன் கலைநானகு
இருமூன்றாறு திகழான மண்டபங்கள் பதினெட்டாகும்
வண்ணமுடன் சீர்காழி
தேவஸ்தானம் மகத்தான கோர்வையது என்னசொல்வேன்
தண்ணமுடன் கலைநான்கு
பதிகளெட்டு தாக்கான மண்டபமும் பதினாலாமே
விளக்கவுரை :
6919. நாலான சேதுபதி
தலமுஞ்சொல்வேன் நலமான கோர்வையது என்னசொல்வேன்
காலான வறுபத்து நாலுமாகும்
கருவான மண்டபந்தான் முப்பத்திரண்டு
மாலான மகதேவர் எந்தன்நாதர்
மார்க்கமுடன் கண்டறிந்த தலமுமாகும்
பாலான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே பாங்கான புதுமை யின்னங்கூறுவேனே
விளக்கவுரை :
6920. கூறுவேன் தணிகையது தலமுமாகும்
கூரான கோர்வையது என்னசொல்வேன்
ஆறுதலங்கோட்டையது மலைமேலப்பா
வப்பனே தசம்ரெண்டு சத்தம்நாலு
வேறுண்டோ வையகத்தில்
சொன்னாரில்லை வெட்டவெளி யானதொரு தலமுமில்லை
நாறுண்டோ பூவதுபோல் மணமுமாகி
நானிலத்தில் கோடிதலங் கண்டேன்பாரே
விளக்கவுரை :