போகர் சப்தகாண்டம் 6431 - 6435 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6431 - 6435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6431. தானான காலாங்கி சித்துபாலா தண்மையுடன் யுந்தனுக்கு மூலிகற்பம்
கோனான மலைதனிலே சென்றுயானும் கொற்றவனே யுந்தனுக்கு மூலிகற்பம்
தேனான செம்புரவி யுண்டகற்பம் தேசமதில் மாண்பரெல்லாம் காணாகற்பம்
பானான சூரியனார் காணாகற்பம் பட்சமுடன் மனதுவந்து கொடுக்கலாச்சே

விளக்கவுரை :


6432. கொடுக்கவே வருணரிஷி தன்தனக்கு கொற்றவனார் உபதேசஞ் செய்தமூலி
நடுக்கடலில் கருஷ்ணாவதாரங்கொண்ட நலமான கண்ணபிரான் மூலிதன்னை
அடுத்துமே ஆகாஸந் தான்பறந்து அலைகடலில் மையமதில் இறங்கியல்லோ
எடுத்துமே வாய்தனிலே கவ்விக்கொண்டு பசரியே மேற்பறந்து வருகலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6433. தருகவே மூலிதனை சாபந்தீர்த்து சட்டமுடன் போகரிஷி நாதருக்கு   
குருவுரைத்த கற்பமென்ற மூலிதன்னை குவலயத்தில் ஒருவருக்கும் விள்ளாதப்பா
சருகுடைய மூலியின்தன் கற்பத்தாலே லட்சாதி கோடிவரை இருக்கலாகும்
திருவருளால் உந்தனுக்கு எல்லாஞ்சித்இ தீர்க்கமுடன் மூலிதனைப் பெற்றுக்கொள்ளே

விளக்கவுரை :


6434. கொள்ளவே யென்றுமல்லோ மனதுவந்து கொற்றவர்க்கு மூலிதனைக்கொடுத்துமேதான்
எள்ளளவும் நாதாந்த சித்தர்தம்மால் எளிதாக ஏற்றமது நேராமற்றான்
உள்ளபடி ஞானோபதேசமார்க்கம் வுத்தமனே தான்கொடுத்து வதிதங்கூறி
தெள்ளமுர்தமானதொரு மாயாகற்பம் தெளிவுடனே செம்புரவி யீயலாச்சே

விளக்கவுரை :


6435. ஆச்சப்பா புலிப்பாணி மகனேகேளு வட்டதிசை தான்கடந்து புரவிகண்டேன்
பாச்சலுடன் குளிகையது மனதுவந்து பட்சமுடன் கண்ணபிரான் உண்ணகற்பம்
மூச்சடங்கி வருணரிஷி கொண்டகற்பம் முனையான வசுவமது வுபதேசத்தால்
ஆச்சரிய மானதொரு கற்பந்தன்னை வன்புடனே பெற்றுவந்தேன் என்றிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar