6821. கூறென்று சொல்லுகையில்
சித்தரான குணமான குணமான சுந்தரானந்தமூர்த்தி
தேறலுடன் யாரென்று
வினவிக்கேட்க தெளிவான காலாங்கி நாதர்தாமும்
மாறலதுவாராமல் சித்துதாமும்
மகத்தான காலாங்கி நாதருக்கு
ஆறலுடன் அஞ்சலித்து
மனதுவந்து வப்பனே சுந்தரனார் என்றிட்டாரே
விளக்கவுரை :
6822. என்றாரே சுந்தரானந்தமூர்த்தி
எழிலான காலாங்கி நாதருக்கு
வென்றிடவே என்தேவா லோகநாதா
விருப்பமுடன் தங்களிடம் மனங்களித்து
சென்றுநான் வந்தேனே சீனதேசம்
செம்மலுடன் அடியேனைப் பாதுகாத்து
குன்றான வுபதேசம் எந்தனுக்கு
கொப்பெனவே கூறுமென்று பணிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
6823. பணிந்துமே
சுந்தரானந்தர்தாமும் பட்சசுடன் காலாங்கிநாதருக்கு
துணிந்துமே எந்தனது
மகிமைதன்னை துப்புரவாய் காட்டுகிறேன் குருவேந்தாகேள்
கணிதமுடன்
மேகமண்டலத்தில்யானும் கர்த்தாவே வாசியோகஞ் செய்துகொண்டு
பணிவுடனே வாகாசஞ்
சென்றுமல்லோ பாங்குடனே மேகத்தோடேகுவேனே
விளக்கவுரை :
6824. ஏகுவேன் மேகத்தோடிணக்கமாகி எழிலான
திருப்பாலின் கடலின்மேலே
போகுவேன் மேகங்கள்
ஜலந்திரட்டி பொங்கமுடன் தானிறங்குங் காலந்தன்னில்
தாகுடனே மேகமது வாகாசத்தில்
தகமையுடன் செல்லுமது பக்கமெல்லாம்
வாகுடனே
யாகாசந்திரிந்துயானும் வளமுடனே நெடுங்காலம் இருப்பேன்தானே
விளக்கவுரை :
6825. தானான பூமிசஞ்சாரமில்லை
தண்மையுடன் மேகத்தில் மேகமாக
கோனான மண்டலத்தில்
நெடுங்காலந்தான் கொற்றவரே வாசியோகஞ் செய்துகொண்டு
தேனான மனோன்மணியை
துதித்துமல்லோ தேற்றமுடன் நெடுங்காலந்தானிருந்தேன்
பானான பரஞ்சுடரே சொரூபானந்தா
பரம்பொருளே வுபதேசம் பகருவீரே
விளக்கவுரை :