போகர் சப்தகாண்டம் 6601 - 6605 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6601 - 6605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6601. செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை தேசத்தின் கருவாளி செய்வாரப்பா
ஒப்பமுடன் கருமிகட்கு வாய்க்காதப்பா ஓகோகோ வாய்த்தாலும் விழலாய்ப்போகும்
இப்புவியில் உந்தமக்கு தருமிகட்கும் எழிலான வேதைமுகம் கூறினேன்யான்
தப்பிதங்கள் நேராது சன்மார்க்கவானே சட்டமுடன் செய்பவனே புத்திவானே

விளக்கவுரை :


6602. புத்தியுடன் சரக்கதனை தானெடுத்து பூபாலா பின்னுமந்தக் கல்வமிட்டு
பத்தியுடன் கருந்துளசி சாறுவிட்டு பாலகனே நாற்சாமமறைத்த பின்பு 
சத்தியமாய் பில்லையது லகுவாய்ச் செய்து சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
முத்திபெற சில்லிட்டுச் சீலைசெய்து முனையான ஜோதியென்ற புடந்தான்போடே

விளக்கவுரை :

[ads-post]

6603. போடேதான் புடமதுவுங் கோழியாக பொங்கமுடன் இப்படியே பத்துமுறைபோடு
நாடேதான் செந்தூரம் நவிலப்போமோ நாதாந்த சித்துமுனி சொல்லாவண்ணம்
கூடநீ செந்தூரந் தனையெடுத்து கொற்றவனே கல்வமதிலிட்டு மைந்தா
ஆடேதான் குமரியின்தன் சாற்றினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


6604. நாலான சாமமது வரைத்தபின்பு நலமான பில்லையது லகுவாய்ச்செய்து
பாலான ரவிதனிலே காயப்போடு பாலகனே காய்ந்தபின்பு சில்லிசெய்து
மாலான சீலையது செய்தபின்பு மகத்தான மணல்மறைவிற் புடத்தைப்போடு
சூலான புடமாறி எடுத்துப்பாரு துப்புரவாய்ச் செந்தூரஞ் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


6605. ஒண்ணாது செந்தூரம் என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள்கூறவில்லை
மண்ணான சரக்கதுவும் பிரிதிவி தன்னால் மகத்தான காரசாரமதுவேயாகி
தண்ணமுடன் வேதைமுகங் கோடாகோடி தாக்கிடவே சிமிட்டுவித்தை யென்னலாகும்
விண்ணான நாதாக்கள் காணாவித்தை விருப்பமுடன் உந்தனுக்கு ஓதினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar