போகர் சப்தகாண்டம் 6901 - 6905 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6901 - 6905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6901. தவமான ரிஷியாருங் கிரியைதன்னில் சட்டமுடன் நெடுங்காலந் தவசுகொண்டு
சவம்போலே மூச்சடங்கி ரூபத்தோடும் சட்டமுடன் தவசிருக்கும் வண்மைதன்னை
பவமகற்று காலாங்கி நாதர்தாமும் பண்புடனே முடிசாய்ந்து தலைகுனிந்து
நவகோடி யஞ்சலிகள் மிகவுஞ்செய்து நாதாந்த சித்துருவே கெதியென்றாரே

விளக்கவுரை :


6902. கெதியென்று காலாங்கி கேட்குங்காலம் கெடியான பலராமர் ரிஷியார்தாமும்
பதிதனையைத் தேடிவந்த ரிஷியாருக்கு பட்சமுடன் ஞானோபதேசங்கூறி 
மதிபோன்ற மகதேவர் காலாங்கிக்கு மார்க்கமுடன் உலகவதிசயங்களெல்லாம்
இதிகாசபுராணமென்னும் மறைப்பையெல்லாம் யிஷ்டமுடன் மனதுவந்து போதித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

6903. போதிக்க வின்னமொரு வயணஞ்சொல்வேன் பொங்கமுடன் புலிப்பாணி புகழுள்ளானே
ஆதித்தன் சந்திரன்போல் பௌத்மசித்து அரகராயென்னசொல்வேன் கிரியிலப்பா
ஜோதிபிரகாசமென்ற காலாங்கிநாதர் சொர்ணமென்ற கிரியைதனில் செல்லும்போது
சாதியிலாதவனார் பௌத்மசித்து சட்டமுடன் நெடுந்தவசி பார்த்திட்டாரே

விளக்கவுரை :


6904. பார்த்தாரே யென்தேவர் காலாங்கிநாதர் பாரான மலைதனிலே தவசியாரை
சார்த்தகையாள் வார்போல தவங்கள்பூண்டு சட்டமுடன் நெடுங்கால சித்துதம்மை
கோர்த்துமே சுரமெத்து அஞ்சலித்து கொப்பெனவே காலாங்கி வணக்கஞ்செய்தார்
தீர்த்தமுடன் பத்திரமாந் துளபமாலை தீர்க்கமுடன் தான்கொடுத்து வர்ணித்தாரே

விளக்கவுரை :


6905. வசனிக்கா ஞானோபதேசந்தன்னை வளமுடனே பௌத்மமகாரிஷியார்தாமும்
நிசமுடனே மனங்களித்து மனதுவந்து நிட்சயமாம் ஞானமென்ற இதிகாசத்தை
வசனமதாய் யுபதேசவுண்மையாக வாக்களித்தார் காலாங்கி நாதருக்கு
தசமுடனே பஞ்தசா காயமாக்கி சட்டமுடன் மனதுவந்து கொடுத்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar