போகர் சப்தகாண்டம் 6951 - 6955 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6951 - 6955 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6951. தந்தாரே எந்தனுக்குக் கோடியாக சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு வதிதமார்க்கம் வப்பனே தாமுரைத்துப்போகவென்று
இந்தமானிலத்திலுள்ள மகிமையெல்லாம் ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சத்தகாண்டம் விண்ணுலகம் மண்ணுலகம் விடங்கொள்ளாதே

விளக்கவுரை :


6952. கொள்ளாது போகரேழாயிரந்தான் கொற்றவனே நாதாக்கள்கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா யிணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்னநூலாம் காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளளவுந் தான்போகாத காண்டமப்பா தருவான பன்னீராயிரந்தானே

விளக்கவுரை :

[ads-post]

6953. பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்னமொழி தவறாது துய்யபாலா துகளகற்றி பன்னீராயிரந்தான் சொன்னார்
கன்னியமாய்ப் பன்னிரண்டு காண்டஞ்சொன்னார் கண்மணியே வாயிரத்துக் கொரு காண்டந்தான்
உன்னிதமாய் இந்நூலுக்கு உவமைகூறி வுத்தமனார் பாடிவைத்தார் உண்மைதானே

விளக்கவுரை :


6954. உண்மையாம் எந்நூலைக் கண்டறிந்து வுத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு தீர்க்கமுடன் ரகசியங்கள் எல்லாம்விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார் நாதாந்த கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே

விளக்கவுரை :


6955. பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள் பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கமெல்லாம் நேர்மையுள்ள வென்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு 
வேரேதான் சாஸ்திரங்கள் பார்ப்பதுண்டோ பார்த்தாலும் பெருநூலுக் கொவ்வாதன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar