போகர் சப்தகாண்டம் 6851 - 6855 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6851 - 6855 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6851. சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துப்புரவாய் நாதாக்கள் மறைத்தசித்து
வெல்லவே யிவ்வேதை யார்தான்செய்வார் வதியாளி செய்வாரே மற்றோர்காணார்
புல்லவே செந்தூர மகிமைதன்னை பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
அல்லவென்றால் செந்தூரம் கோடிபாகம் வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே

விளக்கவுரை :


6852. காணவே செந்தூரம் மண்டலந்தான் கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டாலல்லோ தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம் நீங்கியல்லோ விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார் வேகந்தன்னை பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே

விளக்கவுரை :

[ads-post]

6853. வீரமாம் வாசியது மேலோடாது வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவுமெத்த சட்டையது மூன்று விசைதள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகுமீறி கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும் சொல்லப்போமோ பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே

விளக்கவுரை :


6854. வேதையாமின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்த புலிப்பாணி புண்ணியவானே
பாதையாம் மதிதனிலே பத்துக்கொன்று பட்சமுடன் தானுருக்கி குருவொன்றீய
சோதனைக்கு இடையாது வுறத்ததங்கம் சோராமல் லிங்கமிட்டு வூதிப்போடு
வேதைமுறை சொன்னவழி தப்பாதப்பா வேதாந்த சித்தினுட வுண்மைபாரே

விளக்கவுரை :


6855. உண்மையாம் இன்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி புனிதவானே
திண்ணமுடன் அயமதுவும் பலந்தான்பத்து திறமான நிம்பழத்தின் சாற்றினாலே
வண்ணமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வாகுடனே கழுவியல்லோ வயமெடுத்து
கண்ணமுடன் கல்வமதில் இட்டுமைந்தா தகமையுடன் பழமதுதான் செப்பக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar