6851. சொல்லவென்றால் நாவில்லை
பாவுமில்லை துப்புரவாய் நாதாக்கள் மறைத்தசித்து
வெல்லவே யிவ்வேதை
யார்தான்செய்வார் வதியாளி செய்வாரே மற்றோர்காணார்
புல்லவே செந்தூர மகிமைதன்னை
பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
அல்லவென்றால் செந்தூரம்
கோடிபாகம் வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே
விளக்கவுரை :
6852. காணவே செந்தூரம் மண்டலந்தான்
கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டாலல்லோ
தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம்
நீங்கியல்லோ விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார்
வேகந்தன்னை பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே
விளக்கவுரை :
[ads-post]
6853. வீரமாம் வாசியது மேலோடாது
வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவுமெத்த
சட்டையது மூன்று விசைதள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகுமீறி
கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும்
சொல்லப்போமோ பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே
விளக்கவுரை :
6854. வேதையாமின்னமொரு
போக்குசொல்வேன் வேதாந்த புலிப்பாணி புண்ணியவானே
பாதையாம் மதிதனிலே
பத்துக்கொன்று பட்சமுடன் தானுருக்கி குருவொன்றீய
சோதனைக்கு இடையாது
வுறத்ததங்கம் சோராமல் லிங்கமிட்டு வூதிப்போடு
வேதைமுறை சொன்னவழி
தப்பாதப்பா வேதாந்த சித்தினுட வுண்மைபாரே
விளக்கவுரை :
6855. உண்மையாம் இன்னமொரு
பாகஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி புனிதவானே
திண்ணமுடன் அயமதுவும்
பலந்தான்பத்து திறமான நிம்பழத்தின் சாற்றினாலே
வண்ணமுடன் தானரைப்பாய்
நாலுசாமம் வாகுடனே கழுவியல்லோ வயமெடுத்து
கண்ணமுடன் கல்வமதில்
இட்டுமைந்தா தகமையுடன் பழமதுதான் செப்பக்கேளே
விளக்கவுரை :