போகர் சப்தகாண்டம் 6441 - 6445 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6441 - 6445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6441. வாழ்கவே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
தாழ்கவே லவணமது இருபத்தைந்து தப்பாமல் வகையொன்றுக் களஞ்சிவீதம்
மூழ்கவே குழிக்கல்லில் தன்னைவிட்டு முனையான காடியென்ற நீராலப்பா
நீழ்கவே முன்சொன்ன காடிதானும் முசியாமல் தானெடுத்து வரைத்திடாயே

விளக்கவுரை :


6442. அரைத்துமே நாற்சாம மானபின்பு வன்பாக பில்லையது லகுவாய்ச்செய்து
குறையாது ரவிதனிலே காயவைத்து குணமாக சில்லிட்டுச் சீலைசெய்து
முறைதானும் பிசகாமல் பின்னுமப்பா முசியாமல் கோழியென்ற புடந்தான்போடு
நிறைபோலே தீயாறி யெடுத்துப்பாரு நிட்களங்கமானதொரு பற்பமாச்சே 

விளக்கவுரை :

[ads-post]

6443. ஆச்சப்பா லவணமதை எடுத்துமைந்தா வப்பனே முன்போலே காடியாலே
மூச்சடங்கத் தானரைப்பாய் நாலுசாமம் முசியாமல் முன்போலே சீலைசெய்து
மாச்சலுடன் ரவிதனிலே காயவைத்து பாங்குபெற புடந்தனையே போடுபோடு
மாச்சலது வாராது லவணபற்பம் மகத்தான நாதாக்கள் வித்தையாச்சே 

விளக்கவுரை :


6444. வித்தையாம் லவணமென்ற பற்பந்தன்னை வீறுடனே இரண்டுபத்து புடமேபோடு
சுத்தமுள்ள பற்பமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
சத்தியமாய் யானறிந்த மட்டுமல்லோ தண்மைபெற வுந்தனுக்கு வோதினேன்யான்
புத்தியுள்ள பூபாலா புண்ணியவானே புகழுடனே செய்துகொண்டால் சித்திதானே

விளக்கவுரை :


6445. தானேகேள் புலிப்பாணி மகனேயப்பா தண்மையுள்ள லவணவகை இருபத்தைந்து
மானேகேள் எந்தனது நிகண்டிலப்பா மகத்தான வாயிரத்து எழுநூற்றுக்குள்
கோனான என்குருவின் கடாட்சத்தாலே கொற்றவனே லவணவகை இருபத்தைந்தும்
மானான பேர்கண்டு விடையுங்கண்டு மகத்தான யினங்கண்டு சேர்வைகாணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar