போகர் சப்தகாண்டம் 6786 - 6790 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6786 - 6790 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6786. தாக்கவே மூசையிட்டு உருக்கிமைந்தா தண்மையுடன் நாளதுவும் உமைந்ததாக
நோக்கமுடன் இப்படிதே பத்துமுறையப்பா நுணுக்கமுடன் உருக்கியல்லோ ஆறவைப்பாய்
வாக்கதுவும்பொய்யாது காலாங்கிநீதி வளம்பெரிய சித்தர்களும் மறைத்ததோஷம்
ஏக்கமது கொள்ளாமல் எழில்வேந்தாகேள் எழிலுடனே செய்குவது பாகமாமே

விளக்கவுரை :


6787. பாகமாம் இப்படியே பத்துமுறைதீர்ந்த பாலான வெள்ளிதனை எடுத்துமைந்தா
ஆகமத்தில் முறைபாடு செய்பாடெல்லாம் வப்பனே கண்டுமிக வுளவாராய்ந்து
வேகமுடன் ஆறுவகை ஜெயநீர்தன்னால் வெட்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பாகமது பொய்யாது மெய்யேயாகும் பாருலகில் செய்தவர்க்கு சித்திதானே

விளக்கவுரை :

[ads-post]

6788. சித்தியாம் இப்படியே பத்துமுறைபோடு சேர்வைகண்டு பதனங்கண்டு உருக்கிசாய்ப்பாய்
சத்தியவான் காலாங்கி நாதர்வாக்கு சங்கரனே பொய்யாது வேதவாக்கியம்
பத்தியுடன் மனோன்மணியை தொழுதுபோற்றி பாலகனே முறைபோலே செய்வாயப்பா
சத்தியுள்ள வெள்ளிதனையூதிப்பாரு சுந்தரனே மாற்றதுவும் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


6789. சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே எவர்தான்காண்பர்
வல்லதொரு சித்தாதி முனிவர்தாமும் வளம்பெரிய சாத்திரத்தில் மறைத்துவைத்த
கல்லான முறைகளெல்லாங் கருக்கள்காட்டி கருவிகரணாதியந்தம் முடிவுண்டாக்கி
நல்லதொரு முறைபாடு செய்பாடெல்லாம் நாட்டினிலே மாண்பர்களுக் குரைத்திட்டேனே

விளக்கவுரை :


6790. உரைத்தேனே தாரமென்ற களங்குமார்க்கம் ஓகோகோ நாதாக்கள் கூறவில்லை
வரையான பொருளெல்லாம் இதிலேதோயும் வளமான மாற்றதுவும் பத்தேயாகும்
திரைகடலில் நாதாக்கள் மறைத்ததாலே தீர்க்கமுள்ள வேதைமுகம் யானுங்கண்டு
விரைபோட்டால் சுரையொன்று முளைக்குமோதான் வித்தகனே தாரமென்ற தங்கமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar