6716. கொள்ளவே யின்னமொரு
போக்குசொல்வேன் குணமான புலிப்பாணி கேந்திராகேள்
எள்ளளவும் பிசகாது இந்தபாகம்
எழிலான வீரமணி வேதையப்பா
விள்ளாதே யொருவருக்கும்
இந்தபாகம் விட்டகுறை இருந்ததினால் உந்தமக்கு
கள்ளமது வாராமல் மனதுவந்து
கண்மணியே கடாட்சித்தேன் பண்புதானே
விளக்கவுரை :
6717. பண்பான வீரமணி தனையெடுத்து
பார்வேந்தா வெள்வங்கஞ் சேர்தானப்பா
திண்ணமுடன் தானுருக்கி
குகையிலிட்டு தீரமுடன் வீரமணி தனையெடுத்து
அண்ணலார் பதம்போற்றி
யடிபணிந்து வப்பனே குளிகையது எடுத்துமைந்தா
வண்ணமுடன் வங்கமது
வுருகும்போது வளம்பெறவே குளிகைதனைப் பொதிந்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
6718. பொதியவே நீருண்டு மேலெழும்பி பொங்கமுடன் மணியதுவும் தெறிக்கும்பாரு
மதிபோன்ற வெள்ளியது
என்னசொல்வேன் மகத்தான வெள்ளீயம் நீர்தானேகி
துதிபெறவே வெள்ளியது
மாற்றோமெத்த துப்புரவாய் சொல்வதற்கு நாவுமில்லை
பதியான வீரமணி தனிலுதித்த
பரிதியென்ற வெள்ளியது காணலாமே
விளக்கவுரை :
6719. காணவே யின்னமொரு
போக்குசொல்வேன் கண்மணியே புலிப்பாணி கவிராஜேந்திரா
ஆணவத்தால் வந்ததொரு
கசரோகங்கள் வப்பனே தேனதனில் அனுபானித்தால்
நாணமது வாராமல்
ரோகங்கள்நாடாது மேனிவிட்டு நழுகும்பாரு
மாணமருங் கல்வியுள்ள
புத்திவானே மார்க்கமுடன் இன்னமொரு மர்மங்கேளே
விளக்கவுரை :
6720. கேளப்பா மணியதனை
எடுத்துமைந்தா கெவனமுடன் பாணிதனிற்பதனம்பண்ணு
வாளப்பா தேகமது செல்லும்போது
வளமுடனே ஐந்தறிவுங் குண்ணுமல்லோ
நாளப்பா வுடலைவிட்டு
ஆத்துமந்தான் நீங்கியே போவதற்கு முன்னதாக
பாளப்பா தன்னைத்தான்
மறந்துமல்லோ பாழுடலும் போவதற்கு நாளுமுண்டே
விளக்கவுரை :