போகர் சப்தகாண்டம் 6861 - 6865 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6861 - 6865 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6861. ஏகாது உப்புக்குங் காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன்
போகாது புடத்துக்கு வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை
சாகாமல் இருந்திடலாம் செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு
வேகாது தேகமது தீயிற்பட்டால் வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே

விளக்கவுரை :


6862. கொள்ளவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி குணமுள்ளானே
வெள்ளமுர்தமானதொரு யெந்தன்சாமி தெளிவான காலாங்கி நாதர்தாமும்
உள்ளபடி திரேதாயி னுகத்திலப்பா வுத்தமனே தாமிருந்த வண்மையெல்லாம்
கள்ளமின்றி இகழாமல் யானுரைப்பேன் கைலாச புலிப்பாணி கருவாய்க்கேளே

விளக்கவுரை :

[ads-post]

6863. கருவான திரேதாயி னுகத்திலப்பா காலாங்கிநாதருட வுண்மையெல்லாம்
திருவான குருமுனி சொன்னநீதி தீர்க்கமுடன் இருவரது சரித்திரங்கள்
குருவான என்தேவர் எந்தனுக்கு கூறியதோர் லோகவதிசயங்களெல்லாம்
கருவறிந்து வழியறிந்து உந்தமக்கு கழறுவேன் புலிப்பாணி கவிவல்லோனே

விளக்கவுரை :


6864. வல்லதொரு திரேதாயினுகத்திலப்பா வளமான லட்சத்தி நாற்பத்தாண்டில்
புல்லான வுலகமது மகிமைசொல்வேன் புகழான பிரளயங்கள் நேர்ந்தபோது
கல்லான மலைகளுமே முழுகியல்லோ கடலேழுந்தான்கடந்து மலைமட்டந்தான்
வல்லமையாய் சத்தசமுத்திரங்களெல்லாம் வளமுடனே பொங்கியது நிற்கலாச்சே

விளக்கவுரை :


6865. நிற்கையிலே காலாங்கி நாதர்தாமும் நீடாழி யுலகமதைக் கண்டேயேங்கி
சொற்பமுடன் தன்மனதில் எண்ணியல்லோ தோறாமல் காலாங்கி கமலர்தாமும்
விற்பனர்கள் இருவருமாய் காலாங்கிகிரியில் வீற்றிருந்தார் மண்டலந்தான் நெடுநாளப்பா
அற்பமுடன் வையத்து மாண்பர்தம்மில் வனேகம்பேர் அம்மலையில் இருந்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar