போகர் சப்தகாண்டம் 6876 - 6880 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6876 - 6880 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6876. கண்டாரே நெடுங்காலந் தவசிருக்கும் கருவான ரிஷியாரை மனதுவந்து
தெண்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தேற்றமுடன் ரிஷியாரைக் கேட்கும்போது
சண்டமாருதம்போலே ரிஷியார்தாமும் சட்டமுடன் மனதுவந்து சாற்றலுற்றார்
திண்ணமுடன் திரேதாயி னுகத்திலப்பா திருவாண்டு முதல்வருஷஞ் சமாதிகாணே

விளக்கவுரை :


6877. தானான காலாங்கி நாதரேகேள் தகமையுடன் திரேதாயினுகத்திலப்பா
தேனான மனோன்மணியாள் கிருபையாலே திரளான பிரளயங்கள் வந்தபோது
மானான மகதேவர் கடாட்சந்தானே மன்னவனே நெடுங்காலந் தவசிருந்தேன்
பானான வையகத்தில் ஆரேனுந்தான் பக்கல்வந்து கேட்டதில்லை என்றிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6878. இட்டாரே வராகரிஷி முனிவர்தானும் எழிலான காலாங்கி தன்னைக்கண்டு
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் விருப்பமுடன் எந்தனையும் காணலாச்சு
சட்டமுடன் உந்தனுக்கு உபதேசங்கள் சாங்கமுடன் போதிப்பேன் என்றுசொல்லி
திட்டமுடன் உலகத்தில் மகிமையெல்லாம் தீர்க்கமுடன் காலாங்கிக் கோதினாரே

விளக்கவுரை :


6879. ஓதினார் சமாதிமுகம் இருந்தகாலம் வுத்தமனார் காலாங்கி நாதருக்கு
ஆதியெனும் பராபரத்தின் ரகசியத்தை வப்பனே காலாங்கிக் கோதினார்காண்
நீதியுடன் உபதேசம் பெற்றுமல்லோ நிகட்சியுடன் தெற்குமுகம் திரும்பிவந்தார்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பரமகுரு ரிஷியொருவர் இருந்திட்டாரே

விளக்கவுரை :


6880. இருந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி இன்புள்ளானே
பொருந்தவே திரேதியினுகத்திலப்பா பொங்கமுடன் காலாங்கி நாதர்தாமும்
திருந்தியே கண்டதொரு வதிசயங்கள் தீர்க்கமுடன் எந்தனுக்கு சொன்னநீதி
வருந்தவே நரசிங்க ரிஷியார்தன்னை வளப்பமுடன் கண்டதொரு வுண்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar