போகர் சப்தகாண்டம் 6836 - 6840 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6836 - 6840 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6836. பாரப்பா யின்னமொரு பரிகாரந்தான் பாலகனே ஸ்தூலமது வுறுதிசெய்ய
ஆரப்பா மணலிரும்பு கொண்டுவந்து வப்பனே வுருக்கியல்லோ தகடடித்து
சீரப்பா முன்சொன்ன பாஷாணத்தை சிறப்புடனே நிம்பழத்தின் சாற்றினாலே
ஊரப்பா மூன்றுவகை பாஷாணந்தான் வுத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


6837. நாலான சாமமது தானரைத்து நலமான இரும்பதனை தகடதாக்கி
பாலான சரக்கெல்லாம் மேலேபூசி பட்சமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் கோழியென்ற புடந்தான்போடு
சூலான வயமதுவும் களங்கமாகி துப்புரவாய்த் தானிருக்கும் வயந்தான்காணே

விளக்கவுரை :

[ads-post]

6838. காணவே யவரெலாந்தானெடுத்து கருவாகப் புடமதுவாய்ச்சேர்த்துக்கொண்டு
தோணவே கடைசரக்கு செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும்
மாணவே கெந்தகமும் லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும்
நீணவே வகைவகைக்குப் பலந்தான்காலாய் நிஷ்களங்கமாகவல்லோ பழச்சார்தானே

விளக்கவுரை :


6839. தானான சாரதுவும் பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில்
தேனான செம்பழத்தின் சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாய் நாலுசாமம்
பானான வில்லையது லகுவாய்ச் செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து  
மானான வோட்டிலிட்டுச் சீலைசெய்து மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே

விளக்கவுரை :


6840. போடேதான் இப்படியே புடந்தான்போடு பொங்கமுடன் தானரைத்து வில்லைதட்டி
நீடேதான் முன்னுரைத்த பாகம்போலே நீதியுடன் வில்லைதட்டிக் காயவைத்து
கூடேதான் சில்லிட்டுச் சீலைசெய்து கொற்றவனே கோழியென்ற புடந்தான்போடு
போடேதான் மண்மறைவிற் பத்துமுறைபோடு பொலிவான வயமதுவும் சிவக்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar