போகர் சப்தகாண்டம் 6531 - 6535 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6531 - 6535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6531. தானான புடமதுவும் கவசம்நீங்கி தண்மையுள்ள மணிதனையே எடுத்துமைந்தா
பானான சக்கினிட சுண்ணந்தன்னை பார்த்திபனே தானெடுத்து மைபோலாட்டி
கோனான குருசொன்ன நீதிபோலே கொற்றவனே கைமுறைகள் பிசகாமற்றான்
ஊனான சங்குதனைக் கவசஞ்செய்து வுத்தமனே புடம்நூறு போட்டிடாயே

விளக்கவுரை :


6532. புடமதுவுஞ் சதமென்றால் நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு
தடமதுவும் நடப்பதற்கு இதுவே சித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு
மடந்தனிலே தானிருக்கும் சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால்
நடராஜ சுந்தரனார் கிருபையாலே நாதாந்த சித்துவெனச் செப்பலாமே

விளக்கவுரை :

[ads-post]

6533. சித்தான சித்துகளும் இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை
வெற்றியுடன் அஷ்டசித்து இதனாலாகும் வேதாந்தத்தாயாரும் பிசங்கிப்பாள்
முத்திபெற மோட்சவழி காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார்
சத்தியங்கள் தவறாமல் குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே

விளக்கவுரை :


6534. பாரேதான் குளிகையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலகனே
நேரேதான் சாத்திரங்கள் உளவாராய்ந்து நேர்மையுடன் மாண்பர்களுக் ஆகாவென்று
சீரேதான் குளிகைதனை முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும்
ஆரோதான் உந்தமக்கு போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செய்வேனே

விளக்கவுரை :


6535. அருளான வருளிதுவும் என்னவென்றால் வப்பனே முன்செய்தபுண்ணியத்தால்
பொருளான சூதமென்ற மணிதானப்பா புண்ணியனே யுந்தமக்கு கிட்டலாச்சு
இருளான பவக்கடலை விட்டகற்றி எழிலான தவக்கடலை யேகியல்லோ 
மருளான ஞானமென்ற கடலைக்கண்டு மன்னவனே சிவயோக நிலையில் நில்லே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar