போகர் சப்தகாண்டம் 6631 - 6635 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6631 - 6635 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6631. கண்டதொரு மாண்பர்களுக் கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
பண்டுளவ மாலையணி கிருஷ்ணாவதாரன்பார் மாலையாகவல்லோ பூண்டுகொண்டு
தண்டுளவ துளசியென்ற மூலிச்சாற்றால் சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
கொண்டிடவே யனுபானம் பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே

விளக்கவுரை :


6632. காணவே நவலோக செந்தூரத்தால் கசரோகம் ஷயரோகம் கழன்றுபோகும்
பூணவே திருகடுகை சூரணத்தில் புகழான செந்தூரம் பணவிடைதான்கொள்ள
ஆணவத்தால் மிஞ்சிவந்த மேகரோகம் வப்பனே கடல்புக்கி யோடும்பாரு .
மாணமருங் கல்வியுள்ள மன்னாகேளும் மகத்தான வியாதிமுகம் இன்னங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

6633. கேளப்பா வனுபானம் நெய்தானாகும் கெடியான நவலோக செந்தூரத்தை .
ஆளப்பா வியாதி முகந்தானறிந்து வப்பனே யனுபானமறிந்துகொண்டால்
கேளப்பா ஒருநாளும் வாராதப்பா குணமுள்ள நவலோக செந்தூரந்தான்
பாரப்பா போகாமல் மண்டலந்தான் பரிவுடனே கொண்டவர்க்கு ரோகம்போமே

விளக்கவுரை :


6634. போமேதான் பதினெட்டு குஷ்டம்போகும் பொல்லாத மேகமென்ற இருபதும்போம்
ஆமேதான் சூலைபதினெட்டும்போகும் வப்பனே காமாலையாறுந்தீரும்
வேமேதான் வாதமது யெண்பதும்போகும் வேகமுடன் பித்தமது நாற்பதும்போம்
நேமேதான் சொன்னபடி கிராணிபோகும் நலமாகப் பாண்டுவகை தீருந்தானே

விளக்கவுரை :


6635. தீருமே தேகமது வூதல்தீரும் தீர்க்கமுடன் ரோகநீரெல்லாம்போகும்
ஈரதனில் தான்சுரக்கும் விஷநீரப்பா எழிலான தந்தநோயெல்லாந்தீரும்
நாறுடலம் கிரந்தியென்ற புண்கள்போகும் நலமான தாதுடனே வலியுண்டாகும்
கூறுமுனி காலாங்கிநாதர்வாக்கு குவலயத்தில் ஒருநாளும் பொய்யாதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar