போகர் சப்தகாண்டம் 6411 - 6415 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6411 - 6415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6411. ஆச்சப்பா காலாங்கி கிருபையாலும் வப்பனே மனோன்மணியாள் ஆசீர்மத்தால்
மூச்சடங்கி வாசியோகஞ் செய்வதற்கு முனையான காயாதி கற்பமெல்லாம்
வாச்சுதே புலிப்பாணி மன்னாகேளு வளம்பெறவே யுந்தனுக்கு யோகங்காண
மாச்சலென்ற யோகநிலை யுந்தமக்கு மகத்தான மகிமைகளும் போதித்தேனே

விளக்கவுரை :


6412. போதித்த யின்னமொரு மார்க்கம்பாரு புகழான புலிப்பாணி மகனேயப்பா
ஆதித்தன் சந்திரன்போல் யுந்தமக்கு வப்பனே யானுரைப்பேன் மகிமைபாரு
ஜொதிமய மானதொரு மயிலின்முட்டை சுந்தரனே மனதுவந்து முட்டைதன்னில்
பாதிமதி விந்துடனே யாயிநாதம் பாங்குபெற தானெடுப்பாய் களஞ்சியொன்றே

விளக்கவுரை :

[ads-post]

6413. ஒன்றான களஞ்சியது வகைவகைக்கு வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளிர்  
குன்றாமல் முட்டைதனில் துவாரமிட்டு குறையாமல் சரக்கெல்லாம் அடைத்துமைந்தா
வென்றிடவே சீலையது வலுவாய்ச் செய்து விவரமுடன் துவாரமதை மறைத்து மைந்தா
சென்றிடவே பாண்டமதில் மணல்தான்கொட்டி செழித்துமே மேலுமந்த மணலைக்கொட்டே

விளக்கவுரை :


6414. கொட்டியே மேற்பாண்டந் தன்னைமூடி குமுறவே சீலையது வலுவாய்ச் செய்து
சட்டமுடன் வாலுகையாம் ஏந்திரத்தில் சாங்கமுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
பட்டயம் போல் மணலதுவஞ் சிவந்தபிண்பு பாலகனே எடுத்துப்பார் அண்டந்தன்னை
நட்டமென்ன காயாதிக் குறுதியாச்சு நலம்பெறவே கவசமதைப் பிரித்துவாங்கே

விளக்கவுரை :


6415. வாங்கியே கவசமதை யெறிந்துபோடு வளம்பெறவே யண்டமதை யுரலிலிட்டு
தூங்கியே திரியாதே இரும்புலக்கை துப்புரவாய்த் தான்கொண்டு ஜாடும்போது
பாங்குபெற மெழுகதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஏங்கியே இருந்தாக்கால் என்னசித்தி எழிலான கற்பமதைத் தேடிக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar