போகர் சப்தகாண்டம் 6481 - 6485 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6481 - 6485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6481. பெற்றேனே காலாங்கி கடாட்சத்தாலும் பெருமையுள்ள மனோன்மணியாள் கிருபையாலும்
கற்றறிந்த நாதாக்கள் அருளினாலும் கைலாசநாதருட புண்ணியத்தால்
சற்றெங்குந் தேடியல்லோ கண்டாராய்ந்து சத்தமுடன் வேதைமுகம் உளவுகண்டு
பெற்றதொரு மைந்தனைப்போல் என்னையெண்ணி பெருமையுள்ள மார்க்கமெலாம் ஓதினேனே

விளக்கவுரை :


6482. ஓதினேன் சிடிகையென்ற வேதையப்பா வுத்தமனே வெடியுப்பு ஐந்தாங்காய்ச்சல்
தீதில்லா வுப்பதுவுங் கப்பியுப்பு தீர்க்கமுடன் பலமைந்து நிறுத்துமைந்தா
ஆதியென்ற முப்பூவைப் பழச்சாற்றாலே வப்பனே தானரைத்துக் கவசஞ்செய்து
ஜோதிமயந் தான்பெறவே ரவியில்வைத்து சோராமல் சீலையது வலுவாய்ச் செய்யே

விளக்கவுரை :

[ads-post]

6483. செய்யவே கோழியென்ற புடத்தைப்போடு செயலான வுப்பதுவுங் கட்டிப்போச்சு
பையவே வுப்பதுவுங் கட்டிற்றானால் பாலகனே யேமமென்ற செடியுமாச்சு
துய்யதொரு வுப்பாலே எல்லாஞ்சித்தி துப்புரவாய் ஜெகத்தொளிவை யற்றபேர்க்கு
உய்யதொரு பொருளெல்லாந் தோயும்தோயும் வுத்தமனே வெடியுப்பைக் கண்டோர்க்காமே

விளக்கவுரை :


6484. கண்டவர்கள் உப்பினிட மார்க்கந்தன்னை காட்டார்கள் கருவாளி மாண்பரெல்லாம்
விண்டதொரு வுப்பினால் அப்புக்கட்டும் விண்ணுலகும் மண்ணுலகும் இதிலடக்கம்
சண்டமாருதங் கொண்ட வுப்பினாலே ஜகமெலாம் படல்கட்டி யாடலாகும்
தொண்டுசெய்து உப்பதனை யறியவேண்டும் துரைராஜ சுந்தரனே செப்பக்கேளே

விளக்கவுரை :


6485. செப்பவென்றால் வெடியுப்பை விட்டாலல்லோ செம்மலுடன் பூவுமில்லை காயுமில்லை
அப்பினால் உப்பதனைக் கட்டலாகும் ஆகாகா நாதாக்கள் சிடிகைவேதை
ஒப்பமுடன் சிடிகையென்ற வுப்புதன்னை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
தப்பிதங்கள் நேராது வுப்பின்மார்க்கம் தண்மையுள்ள மன்னவனே சாற்றக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar