6971. தானான புலிப்பாணி தகமையோனே
தாக்கான என்தேவர் சொன்னநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே
கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
மானான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
பானான பாரிலுள்ளோர்
புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே
விளக்கவுரை :
6972. செல்கவென்றால் எந்தன்முறை
பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து
புல்கவே வையகத்தைத்
தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று
வில்கவே கலியுகத்தில்
இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது நெடுநாளு
மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே
விளக்கவுரை :
[ads-post]
6973. மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில்
அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
எண்ணமது கலியுகத்து
மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
கண்ணவிந்த மாண்பரப்பா
கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே
விளக்கவுரை :
6974. நன்றான காசினியை மறந்துமல்லோ
நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
குன்றான கலியுகத்தில்
நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று
என்றைக்கும் வையகத்தின்
வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
தென்றிசையில் கும்பமுனி
சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே
விளக்கவுரை :
6975. தானான வகஸ்தியர்க்கு
சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
கோனான வரரிஷியார்
தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றி போற்றி
தொழுதுமே சிவவாக்கியர்
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர்
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :