போகர் சப்தகாண்டம் 6846 - 6850 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6846 - 6850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6846. ஒண்ணாத தங்கமது மாற்றுசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்து
தண்ணமுடன் மாற்றதுவோ லக்கோயில்லை தாடாண்மைகொண்டடொரு வுறத்ததங்கம்
பண்ணுதற்கு விட்டகுறை யில்லாவிட்டால் பலிக்குமோ பாராளும் மாண்பருக்கு
நண்ணமுடன் மனதுவந்து இந்தபாகம் எழிலாக செய்பவர்க்கு பலிக்குந்தானே

விளக்கவுரை :


6847. பலிக்குமே இத்தங்கம் பிறவித்தங்கம் பாரிலுள்ள சிவயோகிக்கான தங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம் வுத்தமனே கருமிகட்கு வாய்க்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம் நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால் பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே

விளக்கவுரை :

[ads-post]

6848. அன்றான யின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி யன்புள்ளானே
குன்றான செந்தூர மென்னசொல்வேன் குறிப்பான வயமதுவும் பலந்தான்பத்து
வென்றிடவே நிம்பழத்தின் சாற்றினாலே விருப்பமுடன் சுத்தியது செய்துமல்லோ
நன்றாகக் கல்வமதிலிட்டுமைந்தா நலமுடனே தானரைக்க மருந்தைக்கேளே

விளக்கவுரை :


6849. கேளப்பா முருங்கைவேர் பட்டைதன்னை கிருபையுடன் தானிடித்து சார்பிழிந்து
பாளப்பா போகாமல் பத்துசாமம் பாங்குடனே தானரைப்பாய் சுன்னநீரும்
ஆளப்பா பலமதுவும் ஒன்றேயாகும் அப்பனே தான்போட்டு வரைத்துமல்லோ
சூளப்பா வில்லையது லகுவாய்ச்செய்து சுந்தரனே ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


6850. காய்ந்தபின்பு பில்லையதை எடுத்துமைந்தா கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
வாய்ந்ததொரு புடமதுவும் கெஜமேயாகும் வளமுடனே போட்டபின்பு எடுத்துப்பாரு
தீய்ந்துமே போகாமல் செந்தூரந்தான் தீர்க்கமுடன் அருணனது நிறம்போலாகும்
மாய்ந்துமே அயமதுவும் மடிந்துமல்லோ மகத்தான செந்தூரஞ் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar