போகர் சப்தகாண்டம் 3346 - 3350 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3346 - 3350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3346. போட்டவுடன் தீமூட்டி புடந்தான்போடு பொன்னவனே மூன்றுநாளாறுமட்டும்
தாட்டிகமாய் தனையெடுத்து பார்க்கும்போது சட்டமுடன் செந்தூரம் அருணன்போலாம்
மாட்டிமையாய் இந்தமுறை ஐந்துபத்து மயங்காமல் தான்போட வரிசைகேளு 
பாட்டினது முறையேனும் பொய்யுமாகா பாரினிலே கொங்கணவர்பாகமாமே

விளக்கவுரை :


3347. பாகமாங் கொங்கணவர் பாகந்தானும் பாரினிலே யாரேனும் செய்ததுண்டோ
கோபமாய் முனிசொன்னவாக்குபொய்யோ கொற்றவனே கொங்கணவர் வாக்குபொய்யோ
ஏகவழி தனைக்கடந்த ஞானசித்து ஏற்றமுடன் மானிடர்கள்பிழைக்கவென்று
சாகமுடன் செய்துவைத்தார் இந்தபாகம் சட்டமுடன் கொங்கணவர் நாதர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3348. தானான செந்தூரமென்ன சொல்வேன் தாரிணியில் மாமுனிவர் ரிஷிகள்தாமும்
தேனான பாகமிது கைபாகந்தான் தேற்றமுடன் ஆராய்ந்து கேள்விகேட்டு
கோனான எனதையர் காலாங்கிநாதர் சொன்னவள வாக்குணமுங்கண்டு
பானான செந்தூரப்பாகங்கண்டு பாரினிலே சந்தேக நீங்கினாரே

விளக்கவுரை :


3349. நீங்கினார் கொங்கணவர் கைபாகத்தில் நீடாழி காலம்வரை நுணுக்கம்பார்த்து
தூங்கியே திரியாமல் சித்துதானும் துறையோடும் முறையோடுஞ் செய்துகொண்டார்
ஓங்கியே பாகமது கைவிடாமல் வுத்தமனே செய்துமல்லோ குளிகைபூண்டு
ஏங்கியே போகாமல் மைந்தாநீயும் எழிலுடனே இப்பாகம் செய்திடாயே

விளக்கவுரை :


3350. செய்யவென்றால் வெகுகோடி மாந்தர்தாமும் செம்மையுடன் செய்துமல்லோ முறைதான்காணார்
பையவே கருவாளி செய்வான்பாரு பாரினிலே மற்றவரே காணார்காணார்
நையவருங் கோபத்தார் செய்யமாட்டார் நாட்டிலுள்ள சாத்மீகர் செய்வார்பாரு
துய்யவே வாதவித்தை செய்வார்தாமும் துப்புரவாய் செய்வதுவும் திண்ணமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar