அகத்தியர் ஞானம் 16 - 20 of 49 பாடல்கள்


agathiyar-gnanam
16. மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
          மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
          நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
          அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
          தளமான தீயில்விழத் தயங்கி னாரே;

விளக்கவுரை :
           
17. தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
          சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
          மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
          இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
          மாட்டினார் சிவனாருத் தரவினாலே.

விளக்கவுரை :

[ads-post]
           
18. உத்தார மிப்படியே புராணங் காட்டி
          உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
          கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
          சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்  
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
          பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.

விளக்கவுரை :
           
19. பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
          பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
          நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
          நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
          பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.

விளக்கவுரை :

20. கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
          கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
          அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
          உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!

விளக்கவுரை :



அகத்தியர் ஞானம் 11 - 15 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

உயர் ஞானம்

எண்சீர் விருத்தம்

11. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
          உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
          பேணிவலம் நோக்கி அவத்தில் நில்லு;
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
          தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
          மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.

விளக்கவுரை :

தனி ஞானம்

12. ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
          உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
          விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
          பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
          கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;

விளக்கவுரை :

[ads-post]

13. விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
          விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
          ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
          சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
          மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.

விளக்கவுரை :

14. மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
          முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
          சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
          செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
          நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.

விளக்கவுரை :
         
ஞானம் - 3

15. பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
          பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
          ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
          கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து
          தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.

விளக்கவுரை :
Powered by Blogger.